MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்: தமிழக அரசியலில் பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்: தமிழக அரசியலில் பரபரப்பு
தமிழ்நாடு

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்: தமிழக அரசியலில் பரபரப்பு

Admin
Last updated: ஜூலை 4, 2026 1:21 மணி
Admin
Share
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டம் தொடர்பான செய்தி
தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்: தமிழக அரசியலில் பரபரப்பு
SHARE

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம், தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ரூ.180 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள்.

இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்எல்ஏ டாக்டர் இளையராஜா, தன்னை அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசியதாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ், ரமேஷ், கார்த்தி உள்ளிட்ட 8 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை நடத்தவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தின்படி, தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முதலில் சட்டப்பேரவையில் அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதற்கு 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டதால், அவர்களை பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்துள்ளனர்.

இதற்காக, ஒரு தனியார் நிறுவனம் மூலம் சுமார் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும், இந்த திட்டம் வெற்றி பெற்றால் தங்களுக்கும் பெரும் தொகை வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்தெந்த எம்எல்ஏக்களை அணுக வேண்டும் என்ற பட்டியல் வழங்கப்பட்டதாகவும், அதன்படி பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், எந்த எம்எல்ஏவும் பணத்திற்கு இணங்கவில்லை என்று வாக்குமூலத்தில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் வெளிவரும் வாய்ப்புகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, தமிழக அரசியலில் மேலும் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ConspiracyDMKRs 180 Crore BribeTamil Nadu Politicsசதித்திட்டம்செந்தில் பாலாஜிடாக்டர் இளையராஜாதமிழக அரசியல்தவெகரூ.180 கோடி பேரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நிர்வாக சீரமைப்புக்கு குழு அமைப்பு
Next Article சென்னை முகப்பேர் பகுதியில் திருட்டு சம்பவம் நடந்த வீடு சென்னை: நடன கலைஞர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு – பூசாரி கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ. 686 கோடியாக இருந்தது, தற்போது…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…

ஜூலை 4, 2026

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல்…

ஜூலை 4, 2026

பள்ளிகளுக்கு அருகே ‘ஸ்டிங்’ பானங்களுக்கு தடை: அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு அருகில் 'ஸ்டிங்' எனர்ஜி பானம் விற்க…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மின் கட்டணம் உயராது – அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மின்வாரியத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதன் மூலம் மாதந்தோறும்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கணிப்புகள்…

1 Min Read
திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

என்னை அசைக்க எந்த கொம்பனாலும் முடியாது – அனிதா ராதாகிருஷ்ணன்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது. என்னை அசைக்க எந்த கொம்பனாலும் முடியாது என…

2 Min Read
தமிழ்நாடு

பவானிசாகர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானை: பீதியில் மக்கள்

பவானிசாகர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானை, இரவு முழுவதும் வனப்பகுதிக்குள் செல்லாமல் அட்டகாசம் செய்தது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் யானையை விரட்ட முயன்று…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?