MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பயிர்க் கடன் தள்ளுபடி: நபார்டு நிபந்தனையால் தவிக்கிறதா த.வெ.க அரசு?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பயிர்க் கடன் தள்ளுபடி: நபார்டு நிபந்தனையால் தவிக்கிறதா த.வெ.க அரசு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - பயிர்க் கடன் தள்ளுபடி: நபார்டு நிபந்தனையால் தவிக்கிறதா த.வெ.க அரசு?

அரசியல்

பயிர்க் கடன் தள்ளுபடி: நபார்டு நிபந்தனையால் தவிக்கிறதா த.வெ.க அரசு?

Admin
Last updated: மே 28, 2026 11:33 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகளின் பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்ளுபடி செய்வதாக த.வெ.க அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி முழுமையாக கடன் தள்ளுபடி செய்யாதது குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அரசியல் கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது. இந்த கடன் தள்ளுபடி விவகாரத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், 900 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரம் கடன் சங்கங்களும், 24 மத்திய கூட்டுறவு வங்கிகளும் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரை விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடன் சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தன. காங்கிரஸ் ஆட்சியில் வைத்தியநாதன் கமிட்டியின் பரிந்துரையின்படி, சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மறுசீரமைப்பு நிதியாக மத்திய அரசு வழங்கியது. இதில் சுமார் 1,000 கோடி ரூபாய் தமிழகத்திற்கான நிதியாகும். இந்த நிதியைப் பெற, மாநில அரசுகள் நபார்டு வங்கியுடன் ஒரு புரிதலுணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வங்கி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு மற்றும் கடன் தள்ளுபடி போன்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்ற காரணத்தால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார். இதனால், ரிசர்வ் வங்கி, செக்ஷன் 35(ஏ)-ன் படி சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியை முடக்கியது. இது தனது தொகுதிப் பிரச்சினை என்றாலும், 'இது ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை' என்று சிதம்பரம் ஒதுங்கிக்கொண்டார். பின்னர், ரூ.19 கோடியை மாநில அரசு செலுத்தினால் வங்கி மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என நபார்டு கூறியது. ஆனால் ஜெயலலிதா ரூ.13 கோடியை மட்டுமே செலுத்த ஒப்புக்கொண்டார். நபார்டு இதை ஏற்கவில்லை.

இந்த பஞ்சாயத்து ஒரு ஆண்டு காலம் நீடித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கருணாநிதி முதல்வரானார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மூலம் சிவகங்கை விவகாரம் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் எடுத்த முயற்சியால், நிதிக்கான உத்தரவாதக் கடிதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது நபார்டு. புரிதலுணர்வு ஒப்பந்தத்திலும் 2006-ல் கருணாநிதி அரசு கையெழுத்திட்டது. 2006-ல் திமுக அரசு சுமார் 7 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது. 2016-ல் ஜெயலலிதாவும் ரூ.5,318.73 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். 2021 பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி 12,110 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். ஆனால் அதைச் செய்ய இயலவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், 2021 மே மாதம் ரூ.12,110 கோடி பயிர்க்கடனை முறைப்படி தள்ளுபடி செய்தார். அதனுடன், ரூ.2,755.99 கோடி மகளிர் சுய உதவிக் குழு கடன்கள், சுமார் ரூ.6 ஆயிரம் கோடி நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்தார். இதன் மூலம், கடன் தள்ளுபடிக்காக மட்டுமே கடந்த ஆட்சியில் சுமார் ரூ.21 ஆயிரம் கோடியை வங்கிகளுக்கு செலுத்தியுள்ளது தமிழக அரசு.

விவசாயக் கடன் தள்ளுபடி என்று திமுக, அதிமுக வாக்குறுதி கொடுத்தாலே கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மிரண்டு போவார்கள். ஏனென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும் உடனடி கடன் தள்ளுபடி அமலுக்கு வந்துவிடும். ஆனால், அரசிடமிருந்து அதற்கான தொகை உடனடியாக வங்கிகளுக்கு வந்து சேராது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல தவணைகளாக இழுத்தடித்தே தருவார்கள். இதனால் வங்கிகள் வட்டி இழப்பை சந்திக்கும். இதற்கெல்லாம் கடிவாளம் போடுவதற்காகவே, 'நபார்டு வங்கியின் அனுமதி இல்லாமல் கடன் தள்ளுபடியை மாநில அரசுகள் அறிவிக்கக்கூடாது. அப்படியே அறிவித்தாலும், தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கான தொகையை அதிகபட்சம் 60 நாட்களுக்குள் முழுமையாக வங்கிகளுக்குச் செலுத்திவிட வேண்டும்' என்ற நிபந்தனைகளை கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தது நபார்டு. இது தெரிந்திருந்ததால் தான், திமுக இம்முறை விவசாயக் கடன் தள்ளுபடி பக்கமே போகவில்லை. நபார்டின் லேட்டஸ்ட் நிலவரம் தெரியாமல் அதிமுக-வும், த.வெ.க-வும் கடன் தள்ளுபடி அறிவிப்பை வாரி வழங்கின. அதிமுக ஆட்சிக்கு வராததால் தப்பியது. ஆட்சியைப் பிடித்த த.வெ.க, இந்த விஷயத்தில் ஆழம் தெரியாமல் ஆஃபர் கொடுத்துவிட்டோமோ என ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Farmers Loan Waiverத.வெ.க அரசுதமிழ்நாடு அரசியல்நபார்டு வங்கிபயிர் கடன் தள்ளுபடிவிவசாய கடன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: தற்காப்பு நடவடிக்கை என விளக்கம்
Next Article குண்டர் சட்ட உத்தரவு தவறு – சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம்: லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அருண்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மக்களவையில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா குறித்து விவாதம்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா: மக்களவையில் காரசார விவாதம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய மசோதா…

ஜூலை 29, 2026

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு: மருத்துவர் கைது

பிஹாரில் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில்…

ஜூலை 29, 2026

மத்திய கல்வி அமைச்சர் நியமனம்: ராகுல்காந்தி கடும் விமர்சனம்

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டது…

ஜூலை 29, 2026

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் விரைவில் 10 மற்றும் 20 ரூபாய்…

ஜூலை 29, 2026

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை…

ஜூலை 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தவெக அரசின் முதல் சட்டசபை: ஆளுநர் உரை வாசிக்கப்படுமா?

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆளுநர் அரலேக்கர் உரையை முழுமையாக வாசிப்பாரா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 Min Read
அரசியல்

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் நிலவும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. முதல்வர் விஜய் அரசின் பயிர்க்கடன்…

2 Min Read
த.வெ.க. நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம்
தமிழ்நாடு

பணம் கேட்டு மிரட்டி.. கல்குவாரியை சூறையாடிய த.வெ.க. நிர்வாகி கைது

பணம் கேட்டு மிரட்டி, ஒரு கல்குவாரியை சூறையாடியதாக த.வெ.க. (TVK) கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

1 Min Read
தமிழ்நாடு

தவெக அரசின் ‘சிங்கப்பெண்கள் படை’ குறித்து சீமான் கேள்வி

பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசின் 'சிங்கப்பெண்கள் படை' குறித்து சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு உரிய கவனம் செலுத்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?