MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அரசியல்

தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Admin
Last updated: மே 17, 2026 9:00 காலை
Admin
Share
SHARE

சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் நேரத்தில் திமுகவினரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தவெகவைச் சேர்ந்த 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 23 அன்று நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டையில் திமுகவினர் வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தவெகவைச் சேர்ந்த ரதி, அவரது கணவர் பாஸ்கர், மகன் சூர்யா, கணவரின் தம்பி காந்தி மற்றும் தனுஷ், வாசுதேவன், கவுதமன், விக்னேஷ் ஆகிய 8 பேர் அங்கு வந்து திமுகவினரை தாக்கி, மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த கே.வி.மோகன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தவெகவைச் சேர்ந்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ரதி, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன், 'ஏற்கனவே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது மனுதாரர் புகார் அளித்ததால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் திமுகவினர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனுதாரர்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி உண்மைத் தன்மையை ஆராயாமல் பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளார். மனுதாரர்கள் மீது இதற்கு முன்பாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதால் அனைவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என வாதிட்டார். போலீஸார் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பாலாஜி இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பி.தனபால், மனுதாரர்கள் ஏற்கனவே திமுகவினர் மீது புகார் அளித்திருப்பதும், அவர்களும் இவர்கள் மீது புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தேர்தல் பணி தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள் 8 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் அனைவரும் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் சொந்த ஜாமீன் மற்றும் அதே மதிப்பில் இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும், 4 வாரங்களுக்கு சனிக்கிழமைதோறும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என நீதிபதி முக்கிய நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKHigh CourtTamil Nadu Newsஅரசியல்தவெகமுன்ஜாமீன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐஎஸ் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!
Next Article கிருஷ்ணகிரி: ஏரியில் 20 டன் மீன்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

சூரியக் கட்சி: கருத்து கேட்பு கூட்டமா? சம்பிரதாயமா? – தொண்டர்கள் குமுறல்!

சூரியக் கட்சியின் தலைவர் கருத்து கேட்பு கூட்டங்களுக்கு கள ஆய்வுக் குழுக்களை அனுப்பியுள்ளார். ஆனால், சில திமுக நிர்வாகிகள் சம்பிரதாயத்திற்காகவே கூட்டங்களை நடத்துவதாகத் தெரிகிறது.

1 Min Read
தமிழ்நாடு

உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு துணையிருப்போம்: மு.க.ஸ்டாலின்

ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கியபோது நெஞ்சம் நெகிழ்ந்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு நாம் துணையாக நிற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
அரசியல்

மதுரை மாநகராட்சி: 400 கோடி ஊழல் – அமைச்சர் நிர்மல் குமார் பகீர்!

மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து விரிவான…

2 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை விளாசிய உதயநிதி ஸ்டாலின்: சினிமா கேமரா என நினைத்தாரா?

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரை நடிகர் விஜய்யை மறந்து முதலமைச்சராக நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?