MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!

தமிழ்நாடு

கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!

Admin
Last updated: மே 14, 2026 6:11 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடியில் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதமாகி, மனைவியே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், அவரது கணவர் மற்றும் அவரது தம்பி உதவியுடன் தோட்ட்த்தில் புதைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த 62 வயதான செல்லத்துரை என்பவரின் மகள் பிருந்தாதேவி (32). இவருக்கு கிருஷ்ணகுமார் என்பவருடன் திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், பிருந்தாதேவி குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற பிருந்தாதேவி வீடு திரும்பாததால், அவரது தந்தை செல்லத்துரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பிருந்தாதேவி பக்கத்து வீட்டில் வசிக்கும் கட்டிட ஒப்பந்ததாரர் மாரிமுத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவரது மனைவி சரவணப் பிரியா (34) வீட்டிற்கு சென்றதும், பின்னர் வெளியே வரவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மாரிமுத்து மற்றும் சரவணப் பிரியாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பிருந்தாதேவி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி மாரிமுத்து வீட்டிற்கு வந்து சென்ற பிருந்தாதேவிக்கும், மாரிமுத்துவுக்கும் நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பிருந்தாதேவி மாரிமுத்துவுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சரவணப் பிரியாவுக்கும், பிருந்தாதேவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணப் பிரியா, பிருந்தாதேவியை தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது கணவர் மாரிமுத்து மற்றும் அவரது தம்பி கார்த்திக் உதவியுடன் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் உள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

இதையடுத்து சரவணப் பிரியா மற்றும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். உடலை ஏற்றிச் சென்ற காரையும், தலைமறைவான கார்த்திக்கையும் தேடி வருகின்றனர். மாரிமுத்துவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், தோட்ட்த்தில் உடலை புதைத்த இடத்தை கண்டுபிடித்தனர். இரவு நேரமானதால், இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிருந்தாதேவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Nadu Crimeகள்ளக்காதல்கொலைதூத்துக்குடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!
Next Article இந்திய ‘ஏ’ அணிக்கு வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் வாய்ப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

முதல்வர் விஜய் சட்டசபையில் பேசுகிறார்
தமிழ்நாடு

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்: முதல்வர் விஜய் தனித்தீர்மானம்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2 Min Read
முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு – ஆகஸ்ட் 3ல் விசாரணை

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை உயர்…

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி பயணம்: திருவள்ளுவர் சிலை திறக்காமல் சென்னை திரும்பிய முதல்வர் விஜய்

டெல்லி சென்றிருந்த தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்காமலேயே சென்னை திரும்பியதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதலமைச்சரான பிறகு முதல்முறையாக அவர்…

1 Min Read
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் சோதனை நடத்துதல்
தமிழ்நாடு

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சென்னை, தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, திருச்செங்கோடு, திருப்பத்தூர், மயிலாடுதுறை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?