MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!
தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!

Admin
Last updated: May 14, 2026 6:11 pm
Admin
Share
SHARE

சென்னை: கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையம் விரைவில் மூடப்படும் நிலையில், அதன் 36 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகங்கள் அல்லது பிரமாண்ட வணிக மால் அமைக்கலாம் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வணிக நோக்க திட்டங்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதாலும், குத்தம்பாக்கத்தில் மற்றொரு புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால், அந்த 36 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புற பசுமைப் பூங்கா, வணிக வளாகங்கள், அலுவலங்கள், திரையரங்குகள், உணவகங்கள் கொண்ட வளாகம், அல்லது பிரமாண்ட வணிக மால் என மூன்று திட்டங்களை CMDA தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டங்கள் விரைவில் அரசின் ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளன.

முன்னதாக, திமுக ஆட்சியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு இந்த இடத்தை தாரை வார்த்து, பிரமாண்ட வணிக மால் அமைக்க திட்டமிடப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்ததால், பசுமைப் பூங்கா அமைப்பது உள்ளிட்ட மேலும் இரு திட்டங்களை CMDA உருவாக்கியுள்ளது. இருப்பினும், வணிக மால் அமைக்கும் யோசனையை திமுக அரசு இன்னும் கைவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலத்தையும், அதைச் சுற்றியுள்ள ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ள 30 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மொத்தம் 66 ஏக்கரில் ஒரு பெரிய பசுமைப் பூங்காவை அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தனிநபர் பசுமை நிலப்பரப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் பெரிய பூங்காக்கள் இருப்பதை ஒப்பிடுகையில், சென்னைக்கு இது போன்ற பசுமைப் பூங்காக்கள் அவசியம் என்றார்.

கிண்டியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டாலும், அது சென்னையின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும், கோயம்பேட்டில் பூங்கா அமைப்பது அண்ணா நகர், முகப்பேர், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குப் பயனளிக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார். எனவே, வணிக வளாகங்கள் மற்றும் மால் அமைக்கும் திட்டங்களைக் கைவிட்டு, 66 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:ChennaiParkPMKஅன்புமணி ராமதாஸ்கோயம்பேடுபசுமைப் பூங்கா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!
Next Article கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவின் புதிய முதல்வர்: வி.டி.சதீசன் யார்? முழு விவரம்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி! புதிய முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு.…

May 14, 2026

உதயநிதி விரக்தியில் பேசுகிறார் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

தேர்தல் தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

May 14, 2026

திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் காதல் திருமண விழாவில்…

May 14, 2026

தேர்தல் ஆணையர் தேர்வு: அமைச்சர் முடிவெடுப்பாரா? உச்சநீதிமன்றம் கேள்வி

தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் மத்திய…

May 14, 2026

16 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மே 30 முதல் சிறப்பு பணிகள் தொடக்கம்!

நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தகுதி நீக்க கோரிக்கை: இ.பி.எஸ்.-க்கு எதிராக எஸ்.பி.வேலுமணி அணி?

அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து, எஸ்.பி.வேலுமணி அணியின் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

5 ஆண்டு சட்டப்படிப்பு: விண்ணப்ப தேதிகள் வெளியீடு!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூன் 5 வரை ஆன்லைனில் பெறப்படும்.

1 Min Read
தமிழ்நாடு

கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவை கணபதி தங்கம்மாள் நகர் 2வது வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகள் யாழினி (17). இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் பங்கேற்றிருந்தார். தேர்வு முடிவுகள்…

1 Min Read
தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?