தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போதைய கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தாமதப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும், கட்சிகளிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கேட்டபோது, 'ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை இருக்குமா என்பதை வானிலை ஆய்வு மையத்திடம் கேட்டு, அதன் பிறகு முதல்-அமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தி பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும்' என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் விஜய் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் அவர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, பள்ளிகள் திறப்பு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.