MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி
தமிழ்நாடு

வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி

Admin
Last updated: ஜூலை 5, 2026 7:01 காலை
Admin
Share
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
SHARE

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தின் தற்போதைய கட்சி அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, களப்பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியாக ஏற்பட்ட பின்னடைவுகள், வாக்கு சதவீதம் குறைந்த பகுதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது, கட்சியின் களப்பணிகளை எப்படி மேலும் வலுப்படுத்துவது, கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைத்துக்கொண்டனர். மேலும், முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி ஆகியோரும் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்துள்ளனர். தொடர்ந்து இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில், அந்தந்த மாவட்டங்களில் அதிமுக கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தி புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'தமிழக வெற்றிக் கழகம் சுனாமி பேரலை விபத்து போல வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வருகிற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் நிச்சயமாக அதிமுகவே வெற்றி பெறும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்' என நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

மேலும், 'அதிமுகவில் இருந்து பலனடைந்து தற்போது கட்சி சரிந்திருக்கும் நேரத்தில் அதனை தாங்கி பிடிக்காமல் வெளியேறுபவர்கள் வெளியேறட்டும். நிச்சயமாக நம்முடைய கட்சி மீண்டும் எழும்' என நிர்வாகிகளிடம் அவர் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

திருவண்ணாமலையைத் தொடர்ந்து, இன்று மாலை பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக் கூட்டங்கள் அதிமுகவின் எதிர்கால வியூகங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKEdappadi PalaniswamiTVKஅதிமுகஉள்ளாட்சித் தேர்தல்எடப்பாடி பழனிசாமிசட்டமன்றத் தேர்தல்தமிழக வெற்றிக் கழகம்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் டி.கே. பிரபுவின் தந்தை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார் அமைச்சர் அப்பாவின் ஆய்வு: பாஜக எஸ்.ஜி.சூர்யா விமர்சனம்
Next Article மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகள்: இஞ்சி, தேன், பப்பாளி, கொத்தமல்லி, எள் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகள்: இஞ்சி, தேன் கலவை சிறப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நடிகர் மோகன்லால் யானை தந்தங்கள் மற்றும் கலைப்பொருட்களை வனத்துறையிடம் ஒப்படைக்க விண்ணப்பம்

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும் பழங்கால கலைப்பொருட்களை வனத்துறையினரிடம் ஒப்படைக்குமாறு…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ரீல்ஸ் பார்த்து ஆட்சியை இழந்த மக்கள்: மேயர் பிரியா பேச்சு

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், திமுகவின் தேர்தல் தோல்வி தற்காலிகமானது என்றும், மக்கள் ரீல்ஸ் பார்த்து நிஜ ஆட்சியை இழந்துவிட்டதாக வருந்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

11 மாவட்டங்களில் இன்று மதியம் வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னிமலையில் ரூ.100 கோடிக்கு பெட்ஷீட்கள் தேக்கம்: வியாபாரிகள் தவிப்பு

சென்னிமலை பகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. ஜனவரி மாதத்திற்குப் பிறகு விற்பனை சரிந்ததால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

மனித நேயம் தழைக்க பாடுபடுவோம் – எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியப் பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?