MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதேவி: சாதனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதேவி: சாதனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதேவி: சாதனை!

தமிழ்நாடு

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதேவி: சாதனை!

Admin
Last updated: ஜூன் 20, 2026 6:31 மணி
Admin
Share
SHARE

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராகப் பணியில் இணைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் ஸ்ரீதேவி.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வரை அரசுப் பேருந்தை இயக்கி வரும் இவர், போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் சென்று தனது கடமையை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். அரசுப் போக்குவரத்துத் துறையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, சமூகத்தில் திருநங்கைகளுக்கான சமத்துவத்தையும் அங்கீகாரத்தையும் உயர்த்தியுள்ளது.

பேருந்தை இயக்கும் ஸ்ரீதேவிக்கு சக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு திருநங்கை கலையரசி நடத்துனராகப் பணியில் சேர்ந்த நிலையில், தற்போது ஸ்ரீதேவி ஓட்டுநராகப் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும், ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். ஆண்கள் மட்டுமே ஓட்டுநர்களாக இருந்த அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தன்னை ஓட்டுநராக நியமித்தது பெருமிதமாகவும் பெருமையாகவும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

‘இது எனக்கு மகிழ்ச்சியான வேலை. நான் இதை வெறும் வேலையாக நினைக்கவில்லை. இந்த வேலையை நான் மிகவும் விரும்பி காதலித்து செய்கின்றேன்’ என்று ஸ்ரீதேவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரியும் தனக்கு நிரந்தரப் பணி வழங்கினால், தனக்கும் தன் குடும்பத்திற்கும், தான் சார்ந்த திருநங்கைகள் சமூகத்திற்கும் அரசு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்ததாக எண்ணுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். 2025 இல் பயிற்சி முடித்ததாகவும், ஒரு வருட காலமாகப் பேருந்து ஓட்டி வருவதாகவும், பணியை நிரந்தரமாக்கினால் அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருநங்கைகள் என்றாலே யாசகம் கேட்கத்தான் செல்வார்கள் என்று நினைத்தவர்கள், தான் இந்த வேலைக்கு வந்ததால் எல்லோரும் சந்தோஷப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

நவீன காலகட்டத்தில் திருநங்கைகள் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திருநங்கை பேருந்து ஓட்டுநராகக் களம் இறங்கியிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கனரக வாகனங்களை இயக்குவது சவாலானது என்ற நிலையை உடைத்து, புதுக்கோட்டை-திருச்சி இடையே தினசரி அரசுப் பேருந்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். குறிப்பாக, அதிக நெரிசல் நிறைந்த திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எந்தவித பதட்டமும் இன்றி பேருந்தை இயக்கி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. போக்குவரத்துத் துறையில் புதிய வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ள ஓட்டுநர் ஸ்ரீதேவிக்கு அரசு உடனடியாகப் பணியை நிரந்தரமாக்கி கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுவாக எழுந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Transgender Driverஓட்டுநர்சாதனைதமிழ்நாடு அரசு பேருந்துதிருநங்கைஸ்ரீதேவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரேஷன் அட்டைதாரர்களே கவனம்: ஜூன் 25க்குள் இதை செய்யுங்கள்!
Next Article விவசாய கடன் தள்ளுபடி: தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் காவல் துறையினர் பறிமுதல் செய்த ரொக்கப் பணம்

மேற்கு வங்கத்தில் இருமல் மருந்து கடத்தல்: ரூ.2.5 கோடி சிக்கியது

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக…

ஆகஸ்ட் 4, 2026

30 ஆண்டு வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள்…

ஆகஸ்ட் 4, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பாதுகாப்பு நிறுவனத்திடம் கண்காணிப்பு பணி ஒப்படைப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை எதிரொலியாக,…

ஆகஸ்ட் 4, 2026

கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண்: தேவஸ்தானம் போலீஸில் புகார்

விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் ஒரு பெண்…

ஆகஸ்ட் 4, 2026

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங் விடுதலை

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

சேலம் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெறும் இடம்
தமிழ்நாடு

சேலத்தில் அம்பேத்கர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு: பரபரப்பு

சேலம் மாநகரில் அம்பேத்கர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் சிலை வடிவமைப்பு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்: எம்.எல்.ஏ.க்களுக்கு 2 நாள் பயிற்சி

சென்னை கலைவாணர் அரங்கில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி முகாம் இன்று முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் பேரவை நடவடிக்கைகள், சட்டங்கள் இயற்றும்…

1 Min Read
தமிழ்நாடு

இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் டி.ஆர். பாலு, ஆ.ராசா எம்பிக்களும் சென்றனர்.

1 Min Read
சிவகாசி பட்டாசு விபத்து நடந்த இடம்
தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?