சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி முகாம் இன்று முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். பேரவை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்த பயிற்சி முகாம் நடைபெறும்.
சென்னை கலைவாணர் அரங்கில் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, பேரவை நடவடிக்கைகள், சட்டங்கள் இயற்றும் முறை, சட்டமன்ற உறுப்பினரின் கடமைகள், பொறுப்புகள், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், அரசின் செயல்பாடுகள், சட்டமன்ற விதிமுறைகள், கேள்விகள் கேட்பது, விவாதிப்பது, மானிய கோரிக்கைகள் மீது பேசுவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் விளக்கப்படும்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, சட்டசபையில் உறுப்பினர்களின் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள் குறித்தும் இந்த பயிற்சி முகாமில் விரிவாக எடுத்துரைக்கப்படும்.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்பதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை திறம்பட செய்ய முடியும் என்றும், மக்களின் தேவைகளை அறிந்து செயல்படவும், சட்டசபையில் சிறப்பாக செயல்படவும் இது உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.