MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

தமிழ்நாடு

69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

Admin
Last updated: மே 28, 2026 1:35 மணி
Admin
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் பல தசாப்தங்களாக பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலனை உறுதி செய்து வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கை தற்போது உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது சமூக நீதி கட்டமைப்பையே அசைத்துப் பார்க்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு தீவிரமாக கையாண்டு, மக்களின் உரிமைகளை சமரசமின்றி பாதுகாக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு என்பது சாதாரண சலுகை அல்ல. இது சமூக நீதிப் போராளிகளின் தொடர் போராட்டங்களாலும், மக்களின் தியாகங்களாலும் வென்றெடுக்கப்பட்ட வரலாற்றுப் பெருமிதம் மிக்க உரிமையாகும். 1992-ல் உச்ச நீதிமன்றம் 50% வரம்பு விதித்தபோதும், தமிழகத்தின் தனித்துவமான சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு, 1993-ல் தனிச் சட்டம் இயற்றி, இந்திய அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இணைத்து பாதுகாப்பு பெறப்பட்டது. இந்த சட்டப் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான அச்சுறுத்தலாகும்.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் இந்த முக்கிய வழக்கில், தமிழக அரசு தனது வாதங்களை மிக வலுவாக முன்வைக்க வேண்டும். 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சமூக, பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்த துல்லியமான, அறிவியல் பூர்வமான புள்ளிவிவரங்களைத் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அனைத்து சமூக நீதி அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து மாநில அரசு தனது நிலைப்பாட்டை உணர்த்த வேண்டும்.

முதல்வர் இதுகுறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், வெறும் ஆலோசனைகளோடு நின்றுவிடாமல், களத்தில் மக்களின் பிரதிநிதியாக தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும். இடஒதுக்கீட்டு வரம்பில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது தமிழகத்தின் அமைதிக்கும், சமத்துவத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவே, 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைத் துளியும் வீரியம் குறையாமல் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி கேட்டுக்கொள்கிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:69% இடஒதுக்கீடுSDPISupreme CourtTamil Nadu Reservationசமூக நீதிதமிழக அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: த.வெ.க.வில் இணைப்பு!
Next Article மனித நேயம் தழைக்க பாடுபடுவோம் – எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவையில் வீடு புகுந்து தாக்குதல்: கல்லூரி மாணவி தந்தை மீது இளைஞர்கள் வெறிச்செயல்!

கோவையில் வீடு புகுந்து கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம், நகைகள் திருட்டு மற்றும் கொலை மிரட்டல் புகார்…

1 Min Read
முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் சுந்தீப் ஆனந்த்
தமிழ்நாடு

திமுக அதிர்ச்சி: எம்பி ஜெகத்ரட்சகன் மகன் தவெகவில் இணைந்தார்

திமுக மூத்த நிர்வாகியும், எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சுந்தீப் ஆனந்த், அமைச்சர் ஆனந்தின் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கரூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் சரண்ஜித் நிகில் (18) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்

அ.தி.மு.க.வில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.பாஸ்கர், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம் தொடரும்'…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?