MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்

Sri Prem Kumar R
Last updated: மே 28, 2026 6:40 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

தமிழக சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். த.வெ.க. அரசுக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல் பரவியது. ஆனால், இதனை வேலுமணி தரப்பினரும், த.வெ.க. தரப்பினரும் மறுத்து வந்தனர்.

இந்தநிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதேபோல, ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அணி மாறி, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், மன்னிப்பு கடிதமும் வழங்கினர். இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. எடப்பாடி பழனிசாமி அணியில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.

இதையடுத்து, அ.தி.மு.க.வில் இரு பிரிவு அணிகளையும் இணைக்க எஸ்.பி.வேலுமணி தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினர். கட்சியில் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் எனவும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் திரும்ப பெறவும் வலியுறுத்தினர். ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததாக தகவல் வெளியானது. இருப்பினும், மீண்டும் சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், லீமாரோஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கடிதத்தை வழங்கி இணைந்தனர். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் செல்லவில்லை. சி.விஜயபாஸ்கர் தலை மைச்செயலகத்திற்கு நேரடியாக சென்றிருந்தார். சி.வி.சண்முகம் சென்னை பால வாக்கம் வீட்டில் இருந்தார். பின்னர், பேச்சுவார்த்தை முடிந்தபின் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது, 'தற்போது நான் எதுவும் பேச விரும்பவில்லை' எனக்கூறி எந்த பதிலையும் தெரிவிக்காமல் காரில் ஏறி அவர் கோபத்துடன் புறப்பட்டு சென்றார். அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய விருப்பம் இல்லாமல் மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், புதுக்கோட்டை இலுப்பூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்தபின் முன்னாள் அமைச்சர் சி.வி.பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- 'எனக்கு தொகுதி மக்கள்தான் முக்கியம். தொகுதி மக்களின் முடிவுதான் என் முடிவு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும்' என்றார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKTamil Nadu Politicsஅதிமுகஅரசியல்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
Next Article சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய இயக்குனர் பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் அதிரடி மாற்றம்: 48 சப்-கலெக்டர்கள், டாஸ்மாக் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 48 சப்-கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் மேலாளர்கள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளை சீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
ஈரோட்டில் கைது செய்யப்பட்ட நந்தி சிலை திருட்டு குற்றவாளிகள்
தமிழ்நாடு

கர்நாடகாவில் நந்தி சிலை திருட்டு: ஈரோட்டில் 3 இளைஞர்கள் கைது

கர்நாடகாவில் கோவிலில் நந்தி சிலைகளை திருடிவிட்டு தமிழகம் வந்த 3 இளைஞர்கள் ஈரோட்டில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர்.

2 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?