இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த சூழலில், சர்க்கரை நோயாளிகள் காலை வேளையில் உட்கொள்ள ஏற்ற, சுவையான மற்றும் சத்தான உணவுகள் குறித்த பட்டியல் இதோ.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஸ்மூத்தி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்தி மிகவும் பயனுள்ளதாக அமையும். ஸ்மூத்தி தயாரிக்க, கொழுப்பு இல்லாத பால், கொழுப்பு இல்லாத தயிர் அல்லது பாதாம் பால் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
மேலும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த மற்றும் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட பழங்களை ஸ்மூத்தியில் சேர்க்கலாம். ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், ப்ளூபெர்ரி போன்ற பழங்களுடன், அவகேடோ, வெள்ளரிக்காய் போன்றவற்றையும் சேர்க்கலாம். பசலைக்கீரை அல்லது கேல் போன்ற கீரை வகைகளில் ஒன்றையும் தேர்ந்தெடுக்கலாம்.
இறுதியாக, தயாரிக்கப்பட்ட ஸ்மூத்தியின் மேல், நார்ச்சத்து அதிகம் நிறைந்த நட்ஸ், ஆளி விதை அல்லது சியா விதைகளைத் தூவி பரிமாறலாம். இந்த ஸ்மூத்தி, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, காலை உணவுக்கு ஒரு சுவையான மாற்றாகவும் அமையும்.