MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!

லைஃப் ஸ்டைல்

பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!

Admin
Last updated: ஜூன் 18, 2026 8:17 காலை
Admin
Share
SHARE

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே சிறுவாலை கிராமத்தில், பெற்றோர் வாங்கிய ரூ.50,000 கடனுக்காக, 15 வயது மாணவனுக்கு செங்கல் சூளை உரிமையாளர் பிரபாகரன் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர், செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் பிரபாகரனிடம் ரூ.50,000 முன்பணம் கடனாக வாங்கியுள்ளார். இதற்காக, அவரும் அவரது மனைவியும் பிரபாகரனின் செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளனர். வாங்கிய கடன் தொகை முழுமையாகக் கழிவதற்குள் இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பியதால், பிரபாகரன் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணம் தரவில்லை.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபாகரன், மாணவனின் தந்தையை கடுமையாகத் திட்டி, மிரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. குடும்பச் சூழல் காரணமாக பணத்தைத் தாமதமாகத் தருவதாக அவர் கூறியபோதும், உடனடியாகப் பணம் கேட்டு பிரபாகரன் மிரட்டியுள்ளார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவனை, பள்ளி அருகே மறைவான இடத்தில் தடுத்த பிரபாகரனும், அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மாணவனின் வாயில் துணியைக் கட்டி, காலணியால் தாக்கியதாகவும், வயிறு மற்றும் முதுகிலும் அடித்து, பிளேடால் வாயைக் கிழித்ததாகவும் மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காயமடைந்த மாணவன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவனின் தந்தை கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபாகரனை கைது செய்து, தலைமறைவான மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Student Assaultகடன்பாடுதாக்குதல்மாணவன்வன்கொடுமைவிழுப்புரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!
Next Article துபாயில் என் விளையாட்டு வாழ்க்கை: மாதவனின் மகன் வேதாந்த்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்த இளைஞரை பெண் போலீஸ் காலால் பிடித்து இழுக்கும் காட்சி

மும்பையில் ஓடும் ரயிலின் முன் தற்கொலை முயற்சி: பெண் போலீஸ் சாமர்த்தியம்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பெண் போலீஸ்…

ஆகஸ்ட் 2, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

சமையல் சோடா கலந்த தண்ணீரில் பிளாஸ்டிக் பொம்மைகளை சுத்தம் செய்தல்
லைஃப் ஸ்டைல்

சமையல் சோடாவை இப்படி பயன்படுத்தினால் வீண் போகாது!

பேக்கிங் சோடாவை வெறும் சமையலுக்கு மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பொம்மைகளை சுத்தம் செய்வது போன்ற வீட்டு உபயோகங்களுக்கும் பயன்படுத்தலாம். இந்த எளிய ஹேக் மூலம் அதன் முழுப் பயனைப்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடகா மனு

மேகதாது அணை கட்ட அனுமதி கோரி கர்நாடகா அரசு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை அணுகியுள்ளது. உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் மனுவை தள்ளுபடி செய்த பின்னணியில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி அரசியல்: மம்தாவுக்குள் பிளவு? கெஜ்ரிவால் சந்திப்பு!

டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி, கட்சி பிளவு அச்சத்தால் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அபிஷேக் பானர்ஜியின் அதிகாரங்கள் குறைப்பு மற்றும் கெஜ்ரிவால் உடனான சந்திப்பு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வருடன் வைகோ சந்திப்பு: மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்த சர்ச்சை?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதலமைச்சர் விஜயை சந்தித்து ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசியுள்ளார். வரும் 24ஆம் தேதி பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து ஆலோசிக்கப்பட…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?