MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!
லைஃப் ஸ்டைல்

பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!

Admin
Last updated: June 18, 2026 8:17 am
Admin
Share
SHARE

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே சிறுவாலை கிராமத்தில், பெற்றோர் வாங்கிய ரூ.50,000 கடனுக்காக, 15 வயது மாணவனுக்கு செங்கல் சூளை உரிமையாளர் பிரபாகரன் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர், செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் பிரபாகரனிடம் ரூ.50,000 முன்பணம் கடனாக வாங்கியுள்ளார். இதற்காக, அவரும் அவரது மனைவியும் பிரபாகரனின் செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளனர். வாங்கிய கடன் தொகை முழுமையாகக் கழிவதற்குள் இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பியதால், பிரபாகரன் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணம் தரவில்லை.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபாகரன், மாணவனின் தந்தையை கடுமையாகத் திட்டி, மிரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. குடும்பச் சூழல் காரணமாக பணத்தைத் தாமதமாகத் தருவதாக அவர் கூறியபோதும், உடனடியாகப் பணம் கேட்டு பிரபாகரன் மிரட்டியுள்ளார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவனை, பள்ளி அருகே மறைவான இடத்தில் தடுத்த பிரபாகரனும், அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மாணவனின் வாயில் துணியைக் கட்டி, காலணியால் தாக்கியதாகவும், வயிறு மற்றும் முதுகிலும் அடித்து, பிளேடால் வாயைக் கிழித்ததாகவும் மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காயமடைந்த மாணவன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவனின் தந்தை கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபாகரனை கைது செய்து, தலைமறைவான மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Student Assaultகடன்பாடுதாக்குதல்மாணவன்வன்கொடுமைவிழுப்புரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!
Next Article துபாயில் என் விளையாட்டு வாழ்க்கை: மாதவனின் மகன் வேதாந்த்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டிஜிட்டல் யுகத்திலும் பேப்பர் செலவில் இந்திய வங்கிகள்: எஸ்பிஐ முதலிடம்

இந்திய வங்கிகள், குறிப்பாக எஸ்பிஐ, டிஜிட்டல் யுகத்திலும் பேனா, காகிதங்களுக்காக ஆண்டுக்கு ₹3,877…

June 18, 2026

மதுபோதையில் இளம்பெண் கொலை: லாரி டிரைவர் கைது

13-ந்தேதி இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில்…

June 18, 2026

தேச பாதுகாப்பில் இந்தியா முன்மாதிரி: அமித்ஷா

தேச பாதுகாப்பில் இந்தியா ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது…

June 18, 2026

மேகதாது திட்டம் தமிழ்நாட்டுக்கு நன்மை: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்

மேகதாது அணைக்கட்டு திட்டம் தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை…

June 18, 2026

தெலுங்கானாவில் பானிபூரி சாப்பிட்ட 24 பேர் பாதிப்பு: 18 குழந்தைகள் உட்பட பலர் அரசு மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானாவில் பானிபூரி சாப்பிட்ட 24 பேர், இதில்…

June 18, 2026

You Might Also Like

கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி? இதோ சில வழிகள்!

கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அவசியம். பார்வை இழப்பு, குளூக்கோமா, கண்புரை போன்ற பாதிப்புகளைத் தடுக்க உதவும் உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

24 மணி நேரமும் தடையற்ற குடிநீர்: முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 25 மாநகராட்சிகளில் 24 மணி நேரமும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தினமும் 3 மணி நேரமும் குடிநீர் வழங்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய்யின் பொருளாதார இலக்கு: நிதி ஆயோக் துணைத் தலைவர் பாராட்டு

முதல்வர் விஜயின் பொருளாதார இலக்கு என்னை கவர்ந்தது என நிதி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி கூறியுள்ளார். 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் அறிமுகம்: பூஜையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பங்கேற்பு

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'லவ்வர்ஸ் பாய்' படத்தின் பூஜையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?