இலங்கையில் பெரும் ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். அரசு நிதியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், தகுதி இன்றி கடற்படையில் நியமனம் பெற்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், வெளிநாட்டு பயிற்சிக்காக அரசு நிதி பயன்படுத்தப்பட்ட விவகாரம் குறித்தும் விசாரணை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.
எனினும், கொழும்பு நீதிமன்றம் பின்னர் அவருக்கு பிணை வழங்கியுள்ளது. இந்த கைது நடவடிக்கை இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விசாரணையில் உள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.