MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆணவத்தின் உச்சம்: முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆணவத்தின் உச்சம்: முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆணவத்தின் உச்சம்: முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்

தமிழ்நாடு

ஆணவத்தின் உச்சம்: முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 1, 2026 10:42 காலை
Fernandez
Share
சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
SHARE

காவிரி நீர் பெறுவது தொடர்பாக, குறித்த காலத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கழகத் தலைவர் முகஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இந்த கோரிக்கையை மதிக்காமல், ஆணவத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அப்பாவு, 'தலைவர் கலைஞர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் 28 ஆண்டுகள் போராடி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை பெற்றுத் தந்தனர். இந்நிலையில், குறித்த காலத்தில் காவிரி நீர் பெறுவதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முகஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தும், அதனை முதல்வர் கண்டுகொள்ளாமல் ஆணவத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'இரண்டு மாதங்களுக்கு முன்பே உச்ச நீதிமன்றத்தை நாடாமல், தான்தோன்றித்தனமாக கர்நாடக முதல்வரை சந்தித்து தண்ணீர் கொண்டு வருவதாக கூறியதன் மூலம், நீங்கள் அவமானப்பட்டது மட்டுமல்லாமல், தமிழகத்தையும் அவமானப்படுத்தி விட்டீர்கள்' என்றும் அவர் சாடியுள்ளார்.

#காவிரி படுகையில் உங்கள் நண்பர் ஜனார்த்தன ரெட்டிக்கு மணல் எடுப்பதற்காக காவிரி படுகையையே காய வைத்துவிட்டீர்களா என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி நீர் மற்றும் மேகதாது அணை குறித்து எந்த விவாதமும் செய்யாமல், ஆட்சியை தக்கவைக்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதிலேயே காலத்தை கடத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களின் சந்திப்பு தாமதமாக நடந்திருந்தாலும், அது காவிரி நீர் பெறுவதற்கான சந்திப்பாக இல்லாமல், தனது நண்பரும், டெல்லி தமிழக அரசு பிரதிநிதியும், ஜனநாயக பட தயாரிப்பாளரும், கர்நாடக முதல்வரின் நெருங்கிய நண்பருமான பெங்களூர் வெங்கட் நாராயணா-வின் தொழில் சார்ந்த சந்திப்பாகவே இருந்திருக்கும் என்றும், இது மிகவும் வேடிக்கையானது என்றும் அப்பாவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் அப்பாவுவின் இந்த கருத்துக்கள், தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், முதல்வரின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன. இந்த சூழலில், சபாநாயகரின் இந்த வெளிப்படையான விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKஉதயநிதிகர்நாடகாகாவிரி நீர்சபாநாயகர் அப்பாவுதமிழக அரசுமுகஸ்டாலின்முதல்வர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கரடி தாக்குதலில் உயிரிழந்த விவசாயியின் உடலை வனத்துறையினர் மீட்ட காட்சி பாபநாசம் அருகே கரடி தாக்கி விவசாயி பலி: 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் உடல் மீட்பு
Next Article ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்பு ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: பயிற்சி முகாமில் பங்கேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் ஐ.ஐ.டி. மாணவி

காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிய சுப்ரீம் கோர்ட்டில் மனு

காவல்துறையின் தடியடியில் காயமடைந்த ஐ.ஐ.டி. மாணவி, காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிய வேண்டும்…

ஆகஸ்ட் 1, 2026

திருவனந்தபுரம்: கடல் சீற்றத்தில் 4 மீனவர்கள் மாயம் – மீட்புப் பணி தீவிரம்

திருவனந்தபுரத்தில் கடல் சீற்றத்தால் 2 படகுகள் கவிழ்ந்து…

ஆகஸ்ட் 1, 2026

தெலங்கானாவில் அதிசய மீன் மழை: வானில் இருந்து விழுந்த மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

தெலங்கானாவில் திடீரென பெய்த மழையுடன் வானில் இருந்து…

ஆகஸ்ட் 1, 2026

தண்ணீர் திறக்காவிட்டால் வெள்ளத்தில் அடித்து செல்வோம்: சிவக்குமார் திடீர் மனமாற்றம்

கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர்…

ஆகஸ்ட் 1, 2026

ஆந்திராவில் ரூ.18,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

ஆந்திராவில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு முக்கிய…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ரவுடிக்கு சலுகை: 3 காவலர்கள் மீது நடவடிக்கை!

மதுரை பிரபல ரவுடிக்கு சலுகை காட்டியதாக சென்னை ஆயுதப்படை ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு தமிழக அரசின் புதிய ஹெல்ப்லைன் 1091

தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக 1091 என்ற புதிய இலவச உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை…

1 Min Read
தமிழ்நாடு

பாடத்திட்ட மறுசீரமைப்பு: மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய குழு

டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை மறுசீரமைக்க புதிய நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அறிவியல் சிந்தனை,…

1 Min Read
தமிழ்நாடு

மதுரையில் மாணவன் கொலை: செல்வப்பெருந்தகை வேதனை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது மாணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேதனை தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கைது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?