ஆணவத்தின் உச்சம்: முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்

சபாநாயகர் அப்பாவு

காவிரி நீர் பெறுவது தொடர்பாக, குறித்த காலத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கழகத் தலைவர் முகஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இந்த கோரிக்கையை மதிக்காமல், ஆணவத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அப்பாவு, 'தலைவர் கலைஞர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் 28 ஆண்டுகள் போராடி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை பெற்றுத் தந்தனர். இந்நிலையில், குறித்த காலத்தில் காவிரி நீர் பெறுவதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முகஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தும், அதனை முதல்வர் கண்டுகொள்ளாமல் ஆணவத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'இரண்டு மாதங்களுக்கு முன்பே உச்ச நீதிமன்றத்தை நாடாமல், தான்தோன்றித்தனமாக கர்நாடக முதல்வரை சந்தித்து தண்ணீர் கொண்டு வருவதாக கூறியதன் மூலம், நீங்கள் அவமானப்பட்டது மட்டுமல்லாமல், தமிழகத்தையும் அவமானப்படுத்தி விட்டீர்கள்' என்றும் அவர் சாடியுள்ளார்.

#காவிரி படுகையில் உங்கள் நண்பர் ஜனார்த்தன ரெட்டிக்கு மணல் எடுப்பதற்காக காவிரி படுகையையே காய வைத்துவிட்டீர்களா என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி நீர் மற்றும் மேகதாது அணை குறித்து எந்த விவாதமும் செய்யாமல், ஆட்சியை தக்கவைக்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதிலேயே காலத்தை கடத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களின் சந்திப்பு தாமதமாக நடந்திருந்தாலும், அது காவிரி நீர் பெறுவதற்கான சந்திப்பாக இல்லாமல், தனது நண்பரும், டெல்லி தமிழக அரசு பிரதிநிதியும், ஜனநாயக பட தயாரிப்பாளரும், கர்நாடக முதல்வரின் நெருங்கிய நண்பருமான பெங்களூர் வெங்கட் நாராயணா-வின் தொழில் சார்ந்த சந்திப்பாகவே இருந்திருக்கும் என்றும், இது மிகவும் வேடிக்கையானது என்றும் அப்பாவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் அப்பாவுவின் இந்த கருத்துக்கள், தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், முதல்வரின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன. இந்த சூழலில், சபாநாயகரின் இந்த வெளிப்படையான விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version