கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படாததால், சிலர் அதிருப்தியில் த.வெ.க.வில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், 'கட்சியின் ஆரம்ப காலம் முதல் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. பலர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த பதவி கிடைக்காததாலும், பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமி நடத்திய மகளிரணி கூட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை. நான் அதிமுகவில் இருந்து விலகவில்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே தொடர்கிறேன்' என்று கூறினார்.
You Might Also Like
புதிய மாவட்டம் அமைகிறது: கும்பகோணம் மக்களுக்கு குட் நியூஸ்!
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். இது அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Min Read
டாஸ்மாக் வெள்ளை அறிக்கை வெளியிடுக: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
டாஸ்மாக் கடைகள் குறித்து தெளிவான முகவரியுடன் கூடிய பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்களை ஏமாற்றும் வகையில் பட்டியலை வெளியிடுவதற்கு பதிலாக வெள்ளை அறிக்கை வெளியிட…
1 Min Read
தமிழக வக்பு சொத்துகளுக்கு ஆபத்து: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
தமிழகத்தில் உமீத் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்படாத 30,000 வக்பு சொத்துக்களை உடனடியாகப் பதிவு செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ…
1 Min Read
குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை மீட்பு: வனத்துறையினர் தீவிர முயற்சி!
தென்காசி குற்றாலம் அருகே தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தாய் யானையுடன் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 Min Read