முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக, குதிரை பேர வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ய தவெக அரசு முயற்சிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தவெக ஆட்சியை நிச்சயம் கவிழ்க்க மாட்டோம். தேர்தலை சந்தித்துதான் ஆட்சியை பிடிப்போம். திமுக குதிரை பேரம் செய்திருந்தால் 2017ஆம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்திருக்க முடியும். நாங்கள் ஜனநாயகத்தை நம்புகிறோம்' என தெரிவித்தார்.
மேலும், 'தவெக கூட்ட நெரிசலுக்கு செந்தில்பாலாஜிதான் காரணம் என தவெக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், திமுக எப்போதுமே குதிரை பேரத்துக்கு எதிரானதுதான். அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது. குதிரை பேரத்தில் ஈடுபட்டிருந்தால் கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்க சொல்லியிருக்க மாட்டோம்' என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ரகுபதி, 'வாஷிங்மிஷினாக விஜய் இருக்கிறார். சி.விஜயபாஸ்கருக்கு 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களின் கறையை போக்கும் மிஷினுக்கு பெயர் விஜய்' என விமர்சித்தார்.
திமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், ஜனநாயக ரீதியாக தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.