பதவி கிடைக்காததால் த.வெ.க சென்றனர்: எஸ்.பி.வேலுமணி

கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படாததால், சிலர் அதிருப்தியில் த.வெ.க.வில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், 'கட்சியின் ஆரம்ப காலம் முதல் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. பலர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த பதவி கிடைக்காததாலும், பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமி நடத்திய மகளிரணி கூட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை. நான் அதிமுகவில் இருந்து விலகவில்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே தொடர்கிறேன்' என்று கூறினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version