கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படாததால், சிலர் அதிருப்தியில் த.வெ.க.வில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், 'கட்சியின் ஆரம்ப காலம் முதல் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. பலர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த பதவி கிடைக்காததாலும், பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமி நடத்திய மகளிரணி கூட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை. நான் அதிமுகவில் இருந்து விலகவில்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே தொடர்கிறேன்' என்று கூறினார்.
You Might Also Like
ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவை: 2 நாட்கள் மாற்றம்
பாலங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உண்டா? மத்திய அரசு விளக்கம்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தனிநபர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகள் இலவசம், ஆனால் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு குறைந்த கட்டணம் வரலாம்.
சேலம் வழியாக செல்லும் ரயில்களில் மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு
ஈரோடு-திருப்பூர் இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம்-டாட்டா நகர் மற்றும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள்…
அதிமுக பெற்ற 31 தொகுதிகள் பாமகவின் பிச்சை – சி.வி.சண்முகம் விமர்சனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக பெற்ற 31 தொகுதிகள் பாமக போட்ட அரசியல் பிச்சை என குற்றம் சாட்டினார்.…

