சவுமியா அன்புமணி பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு

பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக சவுமியா அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சட்டசபை செயலாளர் கே.சீனிவாசனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ம.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில், பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், செஞ்சி எம்.எல்.ஏ. கணேஷ்குமார் துணைத் தலைவராகவும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. சிவக்குமார் கொறடாவாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version