உயிரநீதிமன்றம் அறிவுறுத்தியும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பை ஏற்படுத்தினார். தஞ்சையில் திமுகவினர் பெருமளவில் திரண்டிருந்ததால், தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்குப் பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதியை போலீஸார் அழைத்து வந்தனர். 'எங்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோ, அந்த காவல் நிலையத்திற்கு மட்டுமே அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறி, வாகனத்தில் இருந்து இறங்க உதயநிதி மறுப்பு தெரிவித்தார். வேறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததற்கான காரணம் விளக்கப்படாததால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பின்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே விசாரணை நடத்த வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட இழுபறிக்குப் பிறகு, காவல் வாகனத்தில் இருந்து இறங்கி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் உதயநிதி சென்றார். காவல் துறை வாகனத்தில் இருந்து இறங்கியபோது, தொண்டர்களை நோக்கி கையசைத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, பின்னர் போலீஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி: பரபரப்பு

Senior Reporter
Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை
