உதயநிதி பேச்சு தவறு; அரசின் கைது நடவடிக்கை தவறு: டி.டி.வி. தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழக அரசியல் சூழல் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும், அதே சமயம் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி தமிழக அரசு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை அவசர அவசரமாக கைது செய்துள்ள நடவடிக்கையும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஒருபுறமும், அவரது கைது நடவடிக்கைக்கு எதிராக திமுகவினர் மறுபுறமும் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை மற்றும் காவிரி நீர் பிரச்சனையால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில், தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளை மறந்துவிட்டு, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தனிப்பட்ட தாக்குதல்களிலும், தரக்குறைவான விமர்சனங்களிலும், அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு வருவது வருந்தத்தக்க செயல் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாளை தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் ஜனநாயக விரோத செயலாகவே திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கைது நடவடிக்கையை பார்க்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வதை தவிர்த்து, காவல்துறையை ஏவி அதிகார துஷ்பிரயோகத்தை கையாளும் தமிழக அரசின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளதக்கவை அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவரது கைதால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் காவல்துறையையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version