பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக சவுமியா அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சட்டசபை செயலாளர் கே.சீனிவாசனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ம.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில், பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், செஞ்சி எம்.எல்.ஏ. கணேஷ்குமார் துணைத் தலைவராகவும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. சிவக்குமார் கொறடாவாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.