MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பட்டாசு தொழில்முனைவோரை நசுக்காதீர்கள்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பட்டாசு தொழில்முனைவோரை நசுக்காதீர்கள்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பட்டாசு தொழில்முனைவோரை நசுக்காதீர்கள்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

தமிழ்நாடு

பட்டாசு தொழில்முனைவோரை நசுக்காதீர்கள்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 3, 2026 4:34 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிடுகிறார்
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
SHARE

சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசு தொழில்முனைவோரை 'ஆய்வு' என்ற பெயரில் அரசு நசுக்குவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தின் அச்சாணியாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் சிவகாசி பட்டாசுத் தொழிலை த.வெ.க. அரசின் தேவையற்ற கெடுபிடிகள் கடுமையாகப் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுக்கு சுமார் ரூ.6000 கோடி வர்த்தகம் நடக்கும் இந்தத் தொழிலை நம்பி 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணிபுரிகின்றனர். நாட்டின் மொத்தப் பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பூர்த்தி செய்யும் இந்தப் பட்டாசுத் தொழில், இன்று அரசின் நடவடிக்கைகளால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது. சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பவர்கள் அல்லது பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், அனைத்துச் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு, உரிய அரசுத் துறைகளிடம் நாக்பூர், மெட்ராஸ் உள்ளிட்ட முறையான உரிமங்களைப் பெற்று, ஆண்டுதோறும் புதுப்பித்துத் தொழில் நடத்திவரும் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் 'அதிரடி ஆய்வு' என்ற பெயரில் அரசு நிர்வாகமும் அதிகாரிகளும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் கண்டனத்திற்குரியவை என அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் இந்த நேரத்தில், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கவிருக்கும் சூழலில், அதிகாரிகளின் தேவையற்ற சோதனைகள் தொழில்முனைவோரிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பூர்வமாக வரி செலுத்தி, உரிமம் பெற்று வணிகம் செய்யும் வர்த்தகர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தி, ஆய்வுகள் என்ற பெயரில் அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்குவது நியாயமற்ற செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பட்டாசுத் தொழிலில் பெருமளவில் கிராமப்புறப் பெண்களும், எளிய மக்களுமே ஈடுபட்டுள்ளனர். அரசின் கெடுபிடிகளால் தொழிற்சாலைகளும் கடைகளும் முடங்கும்போது, அதைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. சிவகாசி மாநகரத்தின் வர்த்தகச் சங்கிலி அறுந்துபோனால், அது விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும், மாநிலத்தின் வர்த்தகச் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, சட்டப்பூர்வமாக உரிமம் பெற்று இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் 'ஆய்வு' என்ற பெயரில் நடத்தப்படும் அச்சுறுத்தல்களையும், கெடுபிடிகளையும் த.வெ.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். பட்டாசுத் தொழிலை முடக்குவதற்குப் பதிலாக, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தொழில்முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகளையும் பாதுகாப்பான வழிகாட்டுதல்களையும் வழங்கும் அணுகுமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் எவ்வித அச்சமுமின்றித் தங்களது வணிகத்தைத் தொடரத் தேவையான சூழலை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும், வணிகப் பெருமக்களையும் அச்சுறுத்தும் போக்கு தொடருமானால், கழகத் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அனுமதி பெற்று, பட்டாசுத் தொழில் உரிமையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சிவகாசியில் மாபெரும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FirecrackersSivakasiThangam ThennarasuTVK GovernmentVirudhunagarசிவகாசித.வெ.க அரசுதங்கம் தென்னரசுபட்டாசுவிருதுநகர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷன் விடுதலை
Next Article முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் பேசுகிறார் பாகிஸ்தான் கிரிக்கெட்: யூனிஸ் கான் தேவை – ரஷீத் லத்தீப் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரசாந்த் கிஷோர்

பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி

பீகார் இடைத்தேர்தலில் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க. வேட்பாளரை 19,324…

ஆகஸ்ட் 3, 2026

ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் இல்லை – நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில்…

ஆகஸ்ட் 3, 2026

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷன் விடுதலை

டெல்லி நீதிமன்றம், பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த…

ஆகஸ்ட் 3, 2026

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் விடுவிப்பு

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி.…

ஆகஸ்ட் 3, 2026

நாடாளுமன்ற இரு அவைகள் எதிர்க் கட்சி அமளியால் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல்…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

தமிழக காவல் துறையின் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப் படையினர் செயல்படுவது குறித்த விளக்கம்
தமிழ்நாடு

சிங்கப்பெண் படை: 57 குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் சென்றனர்

தமிழக காவல் துறையின் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப் படையினர், பள்ளி இடைநிற்றலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் 57 குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

2 Min Read
தமிழ்நாடு

திருவள்ளூர் இறால் ஆலையில் அமோனியா கசிவு: பலி 15 ஆனது

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பலர் கோமா நிலையில் இருப்பதால் மேலும் உயிரிழப்பு ஏற்படலாம்…

1 Min Read
தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த மத்திய அரசு அறிவிப்பு
தமிழ்நாடு

சரக்கு ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு: மத்திய அரசு தகவல்

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து, அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மின்னணு ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.

1 Min Read
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆய்வு செய்கின்றனர்
தமிழ்நாடு

சென்னை: 638 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல், ரூ.14 லட்சத்திற்கும் மேல் அபராதம்!

சென்னை மாநகராட்சியில் ஒரு மாத காலத்தில் 638 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.14 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?