MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சிவகங்கை: குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது – என்ன காரணம்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - சிவகங்கை: குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது – என்ன காரணம்?

அரசியல்

சிவகங்கை: குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது – என்ன காரணம்?

Admin
Last updated: மே 25, 2026 3:34 மணி
Admin
Share
SHARE

சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் மற்றும் ஜல்ஜீவன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், குடிநீர் பற்றாக்குறை நீடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைத்து இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சிவகங்கை நகராட்சி, திருப்பத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, சிங்கம்புணரி ஆகிய 4 பேரூராட்சிகள் மற்றும் 779 கிராமப்புற பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் எஸ்.புதூர் ஒன்றியம் இணைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கென பிரத்யேகமாக ரூ.2,119.07 கோடியில் தொடங்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் கடந்த 2021 பிப்ரவரியில் தொடங்கி, இந்த ஆண்டு ஜனவரி 31 அன்று பயன்பாட்டிற்கு வந்தன. இத்திட்டத்தில் காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை, மானாமதுரை நகராட்சிகள் மற்றும் ஏற்கனவே ராமநாதபுரம் திட்டத்தில் இருந்த சிவகங்கை நகராட்சி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய திட்டத்தின் மூலம் 16.12 லட்சம் மக்களுக்கு தினமும் சராசரியாக 86.42 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ளூர் குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுவரை 2,53,781 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து சிவகங்கை சமூக ஆர்வலர் ராஜாராமன் கூறுகையில், 'புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும், ஆங்காங்கே குழாய் உடைப்புகள் ஏற்படுகின்றன. மேலும், ஜல்ஜீவன் திட்டத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன. பல இடங்களில் குழாய்கள் சரியாக பதிக்கப்படவில்லை. இணைப்புகள் வழங்கப்பட்ட கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுடன் முறையாக இணைக்கப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, தண்ணீர் விநியோகத்தில் உள்ள தடைகளை நீக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஜல்ஜீவன் திட்டப் பணிகள் முழுமையாக முடியவில்லை. நிதி ஒதுக்கீடு வராததால் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க முடியவில்லை. இதனால் அவர்கள் பணியை தாமதப்படுத்துகின்றனர். இதன் காரணமாக, தற்போதுள்ள நடைமுறைகளின்படியே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது' என்று விளக்கமளித்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:SivagangaWater Crisisகாவிரி கூட்டுக் குடிநீர்குடிநீர் பிரச்சினைசிவகங்கைதமிழ்நாடுஜல்ஜீவன் திட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பொருளாதார தாக்குதல் – ராமதாஸ் கண்டனம்
Next Article பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை – முதல்வர் விஜய் அதிரடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

அதிமுக வலுவிழக்க பழனிசாமிதான் காரணமா? – அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் கட்சி வலுவிழந்து வருவதாக குற்றம் சாட்டினார்.

1 Min Read
அரசியல்

சனாதனத்தை சாதிக்குள் அடைக்க பார்க்கிறீர்களா? தமிழக பாஜக கேள்வி

சனாதன தர்மத்தை சாதிக்குள் அடைக்க முயற்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி திமுகவை குற்றம் சாட்டியுள்ளார். இந்து மதத்தை அவமானப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

1 Min Read
அரசியல்

5 எம்எல்ஏக்கள் பழனிசாமிக்கு ஆதரவு – சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சி

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, சி.வி.சண்முகம் அணியில் இருந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

செஸ் விளையாடிய முதல்வர் விஜய்: பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு

நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா, முதல்வர் விஜய்யை சந்தித்து செஸ் விளையாடினார். முதல்வர் அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கினார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?