MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

Admin
Last updated: மே 28, 2026 8:09 காலை
Admin
Share
SHARE

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது இளம்பெண்ணை, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக் கோரி, பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கும், செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்த விவரங்களை போலீஸ் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தனது வழக்கையும் திருவண்ணாமலை நீதிமன்றம் விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிகளவில் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சம்பந்தப்பட்ட காவலர்கள் இருவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை வரும் ஜூன் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், திருவண்ணாமலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மாதங்கள் ஆகியும் விசாரணை துரிதப்படுத்தப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த பாலியல் வழக்கை திருவண்ணாமலை நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து, வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகாவலர்கள்சென்னை ஐகோர்ட்திருவண்ணாமலைபாலியல் வன்கொடுமைவழக்கு விசாரணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் மறைவு
Next Article ஐபிஎல் 2026: தோல்விக்கு பின் கம்மின்ஸ் பேச்சு – வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டிய ஹைதராபாத் கேப்டன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா
தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா ராஜினாமா: பரபரப்பு

தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா, உறுப்பினர்கள் சுப்பிரமணியம், சுகுமார் ஆகியோர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இது அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

த.வெ.க.வில் சேர வற்புறுத்தினர்: அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் சேர வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு. முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் கைது.

2 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் ஜூலை 10-ல் கரூர் பயணம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தமிழக முதல்வர் விஜய், ஜூலை 10 மற்றும் 11 தேதிகளில் கரூர் பயணம் மேற்கொள்கிறார். நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல்…

1 Min Read
அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு

அதிமுகவில் தினகரன் ரீ-என்ட்ரி: பழனிசாமிக்கு நிர்வாகிகள் கோரிக்கை

அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த இது அவசியம் என நிர்வாகிகள்…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?