MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை

அரசியல்

ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை

Admin
Last updated: மே 27, 2026 11:04 காலை
Admin
Share
SHARE

சென்னை: கடந்த மார்ச் 1, 2024 அன்று சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டைக்கு சென்ற பொதிகை ரயிலில், மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.180 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பிலோமன் பிரகாஷ், வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்த யேசுராஜ் (39) உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட யேசுராஜ், இந்த கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளார். சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியதும், இதில் பல சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், வியாசர்பாடி சாஸ்திரி நகரில் யேசுராஜின் வீடு, அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஜான் பிரிட்டோவின் வீடு, மற்றும் பிலோமன் பிரகாஷின் வீடு ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையை ஒட்டி, அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், வழக்கு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Drug SeizureED Raidஅமலாக்கத்துறைசென்னைசோதனைபோதைப்பொருள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவில்பட்டி அருகே பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு
Next Article இன்ஸ்டாகிராம் காதல்: கடிதம் எழுதிவிட்டு மாயமான மாணவி மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

1984 சீக்கியர் கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார்

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி…

ஆகஸ்ட் 21, 2026

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில்…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடியில் 65 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவர் கைது

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் 65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த…

1 Min Read
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா
அரசியல்

தேர்தல் அரசியலில் இருந்து விலகல்: சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக 2028 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதாகவும் அவர்…

2 Min Read
அரசியல்

குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர்…

1 Min Read
தமிழ்நாடு

பெண் உதவி இயக்குனருக்கு ஆபாச மெசேஜ்: நண்பர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் குறும்பட உதவி இயக்குனருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அவரது கல்லூரி நண்பர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?