MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குதிரை பேரம், யானை பேரம் எல்லாம் நடந்தது – ரகுபதி குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குதிரை பேரம், யானை பேரம் எல்லாம் நடந்தது – ரகுபதி குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குதிரை பேரம், யானை பேரம் எல்லாம் நடந்தது – ரகுபதி குற்றச்சாட்டு

தமிழ்நாடு

குதிரை பேரம், யானை பேரம் எல்லாம் நடந்தது – ரகுபதி குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூலை 2, 2026 8:57 மணி
Admin
Share
SHARE

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக கைது செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'குதிரை பேரத்திற்கு எடுத்துக்காட்டே தவெக தான். 108 என்பதை 120 ஆக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. அதற்காக குதிரைபேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊழல் கரை உள்ளவர்களுக்கு எல்லாம் வாஷிங் பவுடர் விஜய்' என விமர்சித்தார்.

'குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் 2017 லேயே நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியும். ஆனால் எங்கள் தலைவர் அதை விரும்பவில்லை. மக்களை சந்தித்து தான் ஆட்சிக்கு வந்தோம். எனவே குதிரை பேரத்திற்கு எதிரானது தான் திமுக. அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் தவெக விற்கு தாவி வருகின்றனர். குதிரைபேரத்திற்கு எடுத்துக்காட்டே தவெக தான்' என்றும் அவர் கூறினார்.

மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்ய சொல்லுங்கள், நானே அவர்களை வெற்றி பெற வைக்கிறேன் என முதல்வர் விஜய் உறுதியளித்ததாக வைகோவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தவெக தரப்பில் இருந்து குதிரை பேரம், யானை பேரம் என எல்லாம் நடந்துள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் அந்த குதிரை பேரத்தின் மீது தமிழ்நாடு காவல்துறை, லஞ்ச ஒழிப்பு துறை எந்த ஒரு வழக்கும் பதியவில்லை. ஆனால் யாரோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் திடீரென்று ஒரு புகார் கொடுக்கிறார், அதன் மீது முழு விசாரணை மேற்கொள்ளாமலேயே நடவடிக்கை தொடங்குகிறது. அந்த புகார் அளித்த எம். எல். ஏ வின் பின்புலம் என்ன தெரியுமா? அவர் ஊத்தங்கரை தொகுதியில் சீட் வாங்கவே முறைகேடு செய்ததாக அந்த கட்சியிலேயே குற்றம் சாட்டுகின்றனர். அதுதான் அவரது தகுதி. இப்போது அவர் சொல்கிறாராம், திருநாவுக்கரசு என்பவர் அவரை தொடர்பு கொண்டு, 'உங்களோட தனியா பேசணும் வாங்க' என்று கூறினாராம். இவர் எதற்கு என கேட்டாராம். 'சபாநாயகர் மேல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர போறோம். அதற்கு ஆதரவா வாக்களிக்கணும்' என்று திருநாவுக்கரசு சொன்னாராம். இப்படி ஒரு கதையை புனைந்து புகாராக கொடுத்துள்ளார். அதன் பேரில் திருநாவுக்கரசை கைது செய்து அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றதாக கூறி இன்றைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்தி உள்ளிட்டவர்கள் மீது அவர்கள் ஏவி விட்ட அம்பு பாய்ந்து கொண்டுள்ளது. இப்படி அவசரவசரமாக ஒரு புகாரை பெற்று அவர்களுக்கு விருப்பப்பட்ட வாக்குமூலத்தை பெற்று தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் முதல்வர் விஜய் கரூருக்கு போவதற்கு முன்னால் செந்தில் பாலாஜியை கைது செய்துவிட்டு செல்ல வேண்டும் என்கின்ற நோக்கமாக இருக்கலாம் என்றுதான் இன்றைக்கு நினைக்கத் தோன்றுகிறது. எனவே குதிரை பேரம் இங்கே நடந்ததற்கு எந்த ஆதாரமும், அடையாளமுமே கிடையாது. காவல்துறை அங்கே வழக்கு பதிவு செய்ததே முதலில் தவறு. அதுவும் ஒரு புகார் அடிப்படையிலே விசாரணை கூட செய்யாமல் அவர்கள் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

குதிரைபேரத்தின் மீது தான் தவெக அரசே நிற்கிறது. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக எம். எல். ஏக்கள் நான்கு பேர் ராஜினாமா பண்றாங்க. அடுத்த நிமிஷம் சட்டமன்றத்திலேயே தவெக வில் இணைகிறார்கள். எனவே அவர்கள் நோக்கம் எல்லாம் 108 என்பதை 120 ஆக்க வேண்டும் என்பது தான். அந்த இலக்கோடு அவர்கள் குதிரைபேர அரசியலிலே ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது இன்றைக்கு வெளிப்படையாக தெரியும். எனவே ஒன்றிய அரசு இதற்கு உரிய விசாரணையை நடத்த வேண்டும். முன்பு எல்லாம் 'வாஷிங் பவுடர் நிர்மா'ன்னு ஒரு பாட்டு வரும். அதுல அந்த பவுடர போட்ட உடனே கரை போயிடும்னு சொல்லுவாங்க. அதுபோல ஒரு ஊழல்கரை உள்ளவங்களுக்கு எல்லாம் வாஷிங் பவுடர் விஜய். இப்போது தவெக வில் இணைந்துள்ள விஜயபாஸ்கர் மேல நாலு கேஸ் நிலுவையில இருக்கு, அந்த எம்.ஆர் விஜய பாஸ்கருக்கு மூணு கேஸ் நிலுவையில இருக்கு. வேலுமணி போன்றவர்கள் அடுத்தடுத்து போக இருப்பதா சொல்றாங்க அவங்க மேலயும் கேஸ் நிலுவையில் இருக்கிறது. இதை எல்லாம் வெறும் பவுடர் போட்டு துவைக்க முடியாது. அதனால மெஷினில் போட்டுதான் துவைக்கணும். அந்த மெஷினுக்கு பேரும் விஜய்ன்னு தான் வச்சிருக்காங்க. விஜய் வாஷிங் மெஷினில் வாஷிங் பவுடர் விஜயை போட்டு துவைத்தால், யார் யார் மீதெல்லாம் ஊழல் குற்ற வழக்குகள் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் புனிதர்களாக, தூய சக்திகளாக மாறிவிடுவார்கள். சொல்ல முடியாது, அவங்களுக்கு கோயில் கட்டி கூட கும்பிட்டாலும் கும்பிட்டுருவாங்க. எனவே அப்படிப்பட்ட நிலைமைதான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கிறது. நாங்கள் பொறுப்பான எதிர்கட்சியாக இருக்கிறோம். எங்களுடைய தலைவர் குதிரைபேர அரசியலில் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் 2017லேயே செய்திருக்க முடியும். அன்றைக்கு எங்களிடம் 109 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். ஆனால் குதிரை பேரம் கூடாது, நான் கொள்ளைப்புறம் வழியாக வர விரும்பவில்லை. மக்களை சந்தித்துத்தான் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொன்ன தலைவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். எனவே கொள்ளைப்புற அரசியல், குதிரைபேரம் என்பது எல்லாம் எங்களுக்கு பிடிக்காது. குதிரைபேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தால் அன்றைக்கே வந்திருக்க முடியும். எனவே குதிரை பேரத்துக்கு எதிரானது தான் திராவிட முன்னேற்ற கழகம். ஜனநாயகத்தை தான் நாங்கள் நம்புகிறோமே தவிர பணநாயகத்தை நம்பவில்லை” என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKகுதிரை பேரம்செந்தில் பாலாஜிமுதல்வர் விஜய்யானை பேரம்ரகுபதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: டிரைவர் கைது
Next Article சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா: ரூ.45,000 தள்ளுபடியில் வாங்க சூப்பர் வாய்ப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் சிவன் கோவிலில் விபத்து நடந்த இடம்

பீகார் சிவன் கோவிலில் சோகம்: மின்கம்பி அறுந்து 7 பேர் பலி

பீகார் லக்கிசராய் அசோக் தாம் சிவன் கோவிலில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட…

ஆகஸ்ட் 17, 2026

திருப்பதியில் 22 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம்…

ஆகஸ்ட் 17, 2026

அயோத்தி ராமர் கோயில்: அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்

அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கான புதிய உடை…

ஆகஸ்ட் 17, 2026

ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான சொத்து…

ஆகஸ்ட் 17, 2026

புதிய இளைஞர் இயக்கம் உதயம்: சமூக மாற்றத்திற்கு களம் இறங்கும் புதிய தலைமுறை

சமூக மாற்றத்திற்காக ஒரு புதிய இளைஞர் இயக்கம்…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள அரசு பேருந்துகள்
தமிழ்நாடு

மேகதாது அணை எதிர்ப்பு: ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம், பயணிகள் தவிப்பு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அமைப்புகளின் போராட்டத்தால், ஓசூரில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

3 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு பாடகர் அறிவு கைது: உதயநிதி கண்டனம்

நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்த ராப் பாடகர் 'தெருக்குரல் அறிவு' கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசை அவர்…

1 Min Read
தமிழ்நாடு

நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த 18 வயது மாணவி ரோஷ்னி, நீட் மறுதேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டார். இது நீட் தேர்வு தொடர்பான தொடர் உயிரிழப்புகளில் மேலும்…

1 Min Read
மாவட்ட ஆட்சியர்கள் இ-சேவை மையங்களை ஆய்வு செய்தல்
தமிழ்நாடு

இ-சேவை மையங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு

மாநிலம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?