MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்
தமிழ்நாடு

நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்

Admin
Last updated: June 21, 2026 10:37 am
Admin
Share
SHARE

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ரோஷ்னி (18), நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் தீவிர பயிற்சி பெற்று வந்த மாணவி, நீட் மறுதேர்வு நெருங்கி வந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற ரோஷ்னி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜூலை 21) நடைபெறவிருந்த நீட் மறுதேர்வுக்காக சொந்த ஊருக்கு வந்த மாணவி, நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த துயர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் இந்த தற்கொலைக்கு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலமாக நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு முன்னர், மே 3 அன்று நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து போன்ற நிகழ்வுகளும் மாணவர்களின் மன அழுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த அனுகீர்த்தனா, சேலத்தைச் சேர்ந்த கோபிகா போன்ற மாணவிகளும் நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே விபரீத முடிவுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamStudent SuicideTamil Naduதர்மபுரிநீட் தேர்வுமாணவி தற்கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவில் 35,000 பேர் யோகா பயிற்சி
Next Article வைகோ தவெக பக்கம் தாவுகிறாரா? மல்லை சத்யா பகீர்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருங்கால கட்டமைப்புக்கு சுயசார்பு அவசியம்: பிரதமர் மோடி

எதிர்கால உள்கட்டமைப்பிற்கு சுயசார்பு மிகவும் இன்றியமையாதது என்று பிரதமர் மோடி தனது உரையில்…

June 21, 2026

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 2-வது நாளாக போராட்டம்

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் 2-வது…

June 21, 2026

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் 16 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

மத்திய அரசு, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்…

June 21, 2026

திரிணாமுல் காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார்

திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் காரணமாக, அக்கட்சியின் மூன்று…

June 21, 2026

மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் 3 புதிய கடற்படை கப்பல்கள்

பிரதமர் மோடி, INS Dunagiri, INS Agray,…

June 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் சுனாமியில் சிக்கியவர் ராஜேந்திர பாலாஜி: அதிமுக ஓட்டுக்களை விமர்சனம்

விருதுநகரில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன். விஜய் பெற்ற வாக்குகளெல்லாம் அதிமுகவின் வாக்குகள்தான்' எனத் தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று நண்பகல் வரை மழை: 11 மாவட்டங்களில் எச்சரிக்கை!

சென்னை உள்பட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று நண்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சி.மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியானது: மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட சி.மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியானது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் தவெகவில் இணைந்ததை விமர்சித்தும் பேசினார்.

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்பு விழா… சென்னை வந்தார் ராகுல் காந்தி

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று காலை தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பலரும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் குவிந்து வருகின்றனர். டெல்லியில்…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?