தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பலரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதவியேற்பு விழாவில் வந்தவர்களில் முக்கியமானவர்களுக்காக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் வரிசையில், த.வெ.க. தலைவர் விஜயின் பெற்றோருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நடிகை திரிஷா மற்றும் அவரது தாயாருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வந்த நடிகை திரிஷா விஜய் தாய் ஷோபாவை சந்தித்து பேசினார்.
மேலும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ள சினிமா நண்பர்களுடன் நடிகை திரிஷா உற்சாகமாக உரையாடினார். பின்னர் நடிகை திரிஷாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.