MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை: ராதிகா சரத்குமார் வேதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை: ராதிகா சரத்குமார் வேதனை
தமிழ்நாடு

இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை: ராதிகா சரத்குமார் வேதனை

Admin
Last updated: June 29, 2026 6:04 pm
Admin
Share
SHARE

இயக்குநர் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற வேண்டிய இடத்தில், சர்க்கஸ் போல மாறியது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 'நாம் எப்போது இந்த இரக்கமற்ற தன்மைக்கு மாறினோம்?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராதிகா சரத்குமார் பதிவிட்டதாவது: '50 ஆண்டுகால நட்போடு பயணித்த நண்பருக்கு ஒரு பிரியாவிடை கொடுத்திருக்கிறோம். ஒரு சிறந்த படைப்பாளி, சிந்திக்க வைத்த எழுத்தாளர், கலையுலக நிகழ்வாக இருந்தாலும் சரி, குடும்ப நிகழ்வாக இருந்தாலும் சரி அவரோடு குடும்பசகிதமாக பழகிய நாட்களை நினைவுகூறுகிறோம். அவரது இந்த திடீர் பிரிவு குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையில் இருக்கின்ற சக கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் பேரதிர்ச்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுடன் திருமதி.குஷ்பு அவர்களின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிலையில், திடீரென மறைந்தார், இன்று அவர் நம்மோடு இல்லை என்ற எதிர்பாராத அதிர்ச்சி செய்தி எங்கள் மனதை எப்படி ஆழமான துக்கத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.'

மேலும் அவர், 'அவரை இழந்து தவிக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மனவேதனையோடு இறுதி மரியாதை செலுத்துகின்ற இடம் ஒரு அமைதி இல்லாமல், நிம்மதி இல்லாமல் மனதார அந்த ஆத்மாவிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் நடந்த சில நிகழ்வுகள் மனதிற்கு மிகுந்த வேதனையாக இருந்தது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்த ராதிகா, 'உடனுக்குடன் செய்திகளை தந்து யார் முதலிடம் பிடிக்கிறார்கள், அழுகையை எந்த அளவிற்கு zoom செய்து காட்டி ஏற்ற வாசகம் போட்டு அதிக பார்வையாளர்களை கவர்கிறார்கள் என்று போட்டி போடுவதால், மனிதர்களின் யதார்த்தமான உணர்வுகளை மதிக்க இயலாமல், புரிதல் இல்லாத சமூகமாக இச்சமூகம் தள்ளப்படுகிறதோ' என்ற ஐயத்துடன் யோசிக்க தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இறுதி அஞ்சலிசமூக வலைதளம்பாக்யராஜ்ராதிகா சரத்குமார்வேதனை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Vespa S 150: 337 கி.மீ மைலேஜ் தரும் ஸ்கூட்டர் – வாங்கலாமா?
Next Article தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை: முதலமைச்சர் விஜய் அதிரடி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய் டெல்லி பயணம்: மோடியை சந்திக்கிறார்!

தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று டெல்லிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். மேலும், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர்…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று அனல் காற்று: ஐரோப்பிய வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று நிலவும் வெப்பத்தின் தாக்கம் குறித்து ஐரோப்பிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், நீர் அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

புள்ளிவிவரப் போர்: ஸ்டாலின் விமர்சனத்துக்கு முதல்வர் விஜய் பதிலடி

தமிழக அரசியல் களத்தில் புள்ளிவிவரங்கள் சார்ந்த விவாதம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு, முதல்வர்…

2 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர்கள்: முக்கிய ஆலோசனை!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அமைச்சரவை சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?