MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டர் கைது கோரி மனைவி உண்ணாவிரதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டர் கைது கோரி மனைவி உண்ணாவிரதம்

தமிழ்நாடு

தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டர் கைது கோரி மனைவி உண்ணாவிரதம்

Admin
Last updated: மே 13, 2026 10:03 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த ஏப்ரல் 7, 2026 அன்று காவல் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி காவல் சார்பு ஆய்வாளரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மணிகண்டனின் மனைவி பொன்மணி போராட்டத்தில் குதித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொன்மணி, 'எனது கணவரைச் சுட்ட காவல் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எனது கணவருக்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். மேலும், எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு எனக்கொரு அரசு வேலையும் வழங்க வேண்டும்' என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

தங்களுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை என்றும், நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் மே 26ஆம் தேதி ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வின்போது, சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு நிறுவனர் தலைவர் சிலுவை, வழக்கறிஞர்கள் திலக் மற்றும் நம்பிராஜன் ஆகியோர் உடனிருந்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்கு எதிராக வழக்கறிஞர் கூட்டமைப்பு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!
Next Article நடிகை கிரக் சீதா: ‘பண்ணை வீட்டுக்கு வந்தால் ரூ.25 லட்சம்’ – பரபரப்பு குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

3 நாட்களில் 844 ரவுடிகள், 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது

தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் மற்றும் 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.42 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களும்…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் செயலர் நியமனம்: முக்கிய துறைகள் ஒதுக்கீடு!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில்…

1 Min Read
தமிழ்நாடு

ரூ.246 கோடி திட்டங்கள் ரத்து – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

நிதிச்சுமையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ரூ.246 கோடி மதிப்பிலான திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் திட்டங்களை ரத்து செய்துள்ளது. இந்த நிதியைக் கொண்டு…

1 Min Read
தமிழ்நாடு

எ.வ.வேலு வீடு முன் திமுகவினர் போராட்டம்: ஆ.ராசா சந்திப்பு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்ற நிலையில், அவரை சந்திக்க வந்த எம்பி ஆ.ராசா வீட்டிற்கு வெளியே காத்திருக்க நேர்ந்தது. அவரை சந்திக்க…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?