MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

Admin
Last updated: ஜூலை 8, 2026 12:00 மணி
Admin
Share
பால் பாக்கெட் மற்றும் தயிர் பாக்கெட் படங்கள்
தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 உயர்வு.
SHARE

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வருகின்றன. இந்தச் சூழலில், நுகர்வோருக்கும் அடுத்த ஷாக் காத்திருக்கிறது. தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயரவுள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், பால் வணிகத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவையையும் கருத்தில் கொண்டு, தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை போட்டி போட்டு உயர்த்தி வழங்குகின்றன. இதனால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்ட, பால் விலையை உயர்த்தும் முடிவுக்கு நிறுவனங்கள் வந்துள்ளன.

இதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில், அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியிருந்தன. தற்போது, இரண்டாவது முறையாக மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவிற்கு தனியார் பால் நிறுவனங்கள் வந்துள்ளன.

அந்த வகையில், இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா பால் நிறுவனம், நாளை (9-ந் தேதி) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்விற்குப் பிறகு, 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.29-ல் இருந்து ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும் மாறும். மேலும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலின் விலை ரூ.39-ல் இருந்து ரூ.41 ஆக உயர்கிறது.

இதேபோல், 1000 மில்லி (1 லிட்டர்) சமன்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.54-ல் இருந்து ரூ.57 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.66-ல் இருந்து ரூ.69 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலின் விலை ரூ.73-ல் இருந்து ரூ.76 ஆகவும் உயர்கிறது. தயிர் விலையிலும் இந்த உயர்வு பிரதிபலிக்கும்.

குறிப்பாக, 500 கிராம் ஹட்சன் தயிரின் விலை ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும், ஆரோக்யா தயிரின் விலை ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரிக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு, அன்றாட தேவைகளுக்காக பாலை நம்பியிருக்கும் சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Arogya MilkMilk Price HikePrivate Milkஆரோக்யா பால்தமிழ்நாடுதனியார் பால்பால் உற்பத்தி பாதிப்புபால் விலை உயர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி (CTI) தலைவர் பிரிஜேஷ் கோயல் கிரிக்கெட் நேரலை: ஆணுறை, டேட்டிங் செயலி விளம்பரங்களுக்கு தடை கோரிக்கை!
Next Article மத்தியபிரதேசத்தில் கிணற்றில் இறந்து கிடந்த மான்கள் மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4.72 கோடி வசூலானது. கோடை…

ஜூலை 8, 2026

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள்…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகமது அலி என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களிப்போம்: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி

எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ். மணியன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்றும், கொறடாவின் உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

நாளை முக்கிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு. சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
தமிழ்நாடு

வேளாங்கண்ணி பேராலயத்தில் ‘திருத்தந்தை விஜய்’ – சர்ச்சை விளக்கம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் திருப்பலியின்போது சிறுவன் 'திருத்தந்தை விஜய்' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பேராலய அதிபர் இருதயராஜ் விளக்கம் அளித்துள்ளார். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?