அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனியார் விமானம் ஒன்று தரையிறங்கும் போது தீப்பிடித்து வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்ப்ஸ்ட்ரீம் ஜி-200 ரக விமானம் லா ரோமானா விமான நிலையத்திற்கு அருகே இந்த துயர சம்பவத்தை எதிர்கொண்டது.
விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவசர நிலையை அறிவித்த விமானக் குழுவினர், மீண்டும் லா ரோமானா விமான நிலையத்திற்குத் திரும்ப முயன்றனர். இருப்பினும், தரையிறக்க முயற்சியின் போது விமானம் தீப்பிடித்து, பின்னர் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவம் லா ரோமானா விமான நிலையத்திற்கு தென்மேற்கே சுமார் 16 மைல் தொலைவில் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். டொமினிகன் குடியரசின் குடிமை விமானப் போக்குவரத்து நிறுவனம் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'விபத்து தொடர்பாக அனைத்து அவசர நடைமுறைகளும் உடனடியாக செயல்படுத்தப்பட்டுள்ளன. சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிய தேவையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணை முன்னேற்றத்தின் அடிப்படையில் கூடுதல் தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கும் போது விமானம் வெடித்து சிதறிய இந்த துயர சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விபத்து பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.