தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக, புதிய ரகத்தில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம், விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நூல்களை கொள்முதல் செய்யும் பொருட்கள் இயக்கும் நிலை குழுவினை தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்த புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000-ன் படி அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, இந்த இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், இதற்காக முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், பயனாளர்களுக்கு வழங்க 2.27 கோடி வேட்டிகள் மற்றும் 2.27 கோடி சேலைகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால், ஏழை எளிய மக்கள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.