த.வெ.க. இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ரமேஷ், திமுகவை 'பாப்பா மாடல்' என விமர்சித்துள்ளார். 'என்ன சொன்னாலும் அழுகுறீங்க.. திமுக பாப்பா MODEL' என்று அவர் குறிப்பிட்டார். பதவிகளை துறந்து அதிமுகவில் இருந்து த.வெ.க.வில் இணைந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஏற்கனவே தளபதி கோட்டையாக இருந்த நிலையில், மேலும் இரண்டு தளபதிகள் இணைந்திருப்பது கோட்டைக்கு வலு சேர்ப்பதாக அமைச்சர் ரமேஷ் கூறினார். இனி தமிழ்நாடே தளபதி கோட்டைதான் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். முதலமைச்சர் விஜயின் தலைமையின் கீழ் மாற்றுக் கட்சியினர் ஒவ்வொரு வாரமும் சாரை சாரையாக இணைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு நல்ல தலைவராக முதலமைச்சர் விஜய்தான் இருக்கிறார் என்றும் அமைச்சர் ரமேஷ் புகழாரம் சூட்டினார். தலைவர் என்பவர் தொண்டர்களின் தோள் மேல் ஏறி நிற்காமல், தொண்டர்களை தன் தோளில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்றும், அதனால்தான் மாற்றுக் கட்சியினர் தங்களது இயக்கத்தில் இணைகின்றனர் என்றும் அவர் விளக்கினார்.
த.வெ.க.வை 'சோபா மாடல்' என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அமைச்சர், திமுகவை 'பாப்பா மாடல்' என்றும், தொட்டதற்கெல்லாம் அழுவதாகவும் சாடினார். சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை எதிர்பார்க்காமல், திமுகவினர் முழு வன்மத்தையும் கொட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தற்போதைய எதிர்கட்சிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், வன்மத்தை கக்குவதையே வேலையாக வைத்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.