MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு மரண தண்டனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு மரண தண்டனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு மரண தண்டனை!

தமிழ்நாடு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு மரண தண்டனை!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 20, 2026 2:32 மணி
Fernandez
Share
மரண தண்டனை விதிக்கப்பட்ட மதபோதகர் ஆபிரகாம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட மதபோதகர் ஆபிரகாம்
SHARE

திருநெல்வேலி மாவட்டத்தில், பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2022-ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனைக்காக வரும் சிறுமிகளிடம் மதபோதகர் ஆபிரகாம் (வயது 47) பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தேவாலயத்திற்கு வந்த நான்கு சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து ஆகஸ்ட் 20 அன்று உத்தரவிட்டார். மேலும், பாலியல் தொல்லைக்கு ஆளான நான்கு சிறுமிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம், மொத்தம் ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பு விவரங்களைக் கேட்டதும் ஆபிரகாம் நீதிமன்ற அறையிலேயே மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Death SentencePastorPOCSOSexual AbuseTirunelveliநெல்லைபாலியல் தொல்லைபோக்சோமதபோதகர்மரண தண்டனை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த கே.ஏ.கே.முகில் அதிமுகவில் இருந்து விலகிய கே.ஏ.கே.முகில்: இபிஎஸ்-க்கு ஷாக்
Next Article இஸ்ரோ நிறுவனத்தின் லோகோ மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான படம் இஸ்ரோவில் 242 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியின் சுயசரிதை குறித்து பதிவிட்டுள்ளார்

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளதில் மகிழ்ச்சி என்றும், பெற்றோரை…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

வந்தே மாதரம்: காங்கிரஸை தாக்கிய அமித் ஷா

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தக்காளி விவசாயி ஒருவர் தனது விளைச்சலைப் பார்த்துக் கவலைப்படும் காட்சி
தமிழ்நாடு

தக்காளி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் ஆழ்ந்த கவலை!

திருப்பூரில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. போதிய தண்ணீர் மற்றும் தரமான விதைகள் இல்லாததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஒரு கிலோ தக்காளி…

2 Min Read
தங்கம் விலை குறைவு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.800 குறைந்தது!

தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! தங்கத்தின் விலையில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது. தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த பலருக்கும்…

2 Min Read
அமைச்சர் ஜெகதீஸ்வரி பேட்டி அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

ஆபாச வீடியோ மிரட்டல்: அமைச்சர் ஜெகதீஸ்வரி பரபரப்பு பேட்டி!

அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

காவிரி நதி இரு மாநில மக்களின் வாழ்வாதாரம்: செல்வப்பெருந்தகை

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு புதிய அணைகளைக் கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார். இது இரு மாநில மக்களின் வாழ்வாதார நதி என்றும்,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?