MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தங்கம் வாங்காதவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தங்கம் வாங்காதவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
தமிழ்நாடு

தங்கம் வாங்காதவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

Admin
Last updated: June 29, 2026 6:40 am
Admin
Share
SHARE

தற்சார்பு பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 'மன் கீ பாத்' நிகழ்ச்சியின் 135வது அத்தியாயத்தில் பேசிய அவர், கடந்த ஆறு மாதங்களில் நாடு அடைந்துள்ள முக்கிய தற்சார்பு சாதனைகளை பட்டியலிட்டார். விமான தொழில்நுட்பத் துறையில் சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். குஜராத்தின் வதோதராவில் 40 விமானங்கள் தயாரிக்கப்படுவதால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் விமானத் துறை பயனடைவதோடு, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் சமீபத்தில் ஐ.என்.எஸ். துனகிரி, ஐ.என்.எஸ். ஷன்சோதக் மற்றும் ஐ.என்.எஸ். அக்ரே ஆகிய மூன்று போர்க்கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இந்த மூன்று கப்பல்களும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை. மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொலைதூர நில தாக்குதல் ஏவுகணையான எல்.ஆர்.எல்.ஏ.சி.எம்., சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை, தொழிற்துறை கூட்டாளிகள் மற்றும் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம், பி.டெக். பட்டப் படிப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடங்களை தொடங்கவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் கூறினார். இது, நாட்டின் பாரம்பரிய அறிவையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அவர் தெரிவித்தார். உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்திய கலாச்சாரம் பரவி வருவதையும் அவர் குறிப்பிட்டார். கரீபியன் தீவு நாடான டொமினிக்கன் குடியரசில், இந்தியர்கள் அல்லாத உள்ளூர் மக்களே இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வேத இலக்கியத்தை பயின்று வருவதாகவும், 'பிரம்மகமல் டொமினிகானா' என்ற குழுவை தொடங்கி வேத பாராயணங்களை கற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மேற்காசியாவில் ஏற்பட்ட போர் காரணமாக, மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளிநாட்டு பயணங்களை குறைத்து, குழுவாக கார்களில் பயணிக்கும் 'கார் பூலிங்' முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தான் விடுத்த வேண்டுகோளுக்கு மக்கள் செவிசாய்த்து ஆதரவு அளித்ததாக பிரதமர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நிலத்தை காக்க இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கும் விவசாயிகள் ஆதரவு அளித்ததாகக் கூறி, நாட்டு மக்களுக்கு தனது நன்றியை காணிக்கையாக்கினார். தேச கட்டுமானத்தில் மக்களின் பங்களிப்பு நிச்சயம் வெற்றியை ஈட்டித் தரும் என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்திய கடற்படைசெயற்கை நுண்ணறிவுதற்சார்பு இந்தியாபிரதமர் மோடிமன் கீ பாத்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; தயாராக இருங்கள் – மு.க.ஸ்டாலின்
Next Article இடைத்தேர்தல், கூட்டணி: புதிய தமிழகம் கட்சி முக்கிய முடிவு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம் நிரம்பி வருகிறது. மதுபான விற்பனையானது…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52…

June 29, 2026

அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க…

June 29, 2026

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கேரளா செல்லவில்லை தமிழக முதல்வர் விஜய்: திடீர் தகவல்!

கேரள முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது. சிங்கப்பெண் அதிரடிப்படையினர் பள்ளிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னை நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

1 Min Read
தமிழ்நாடு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த சூட்கேஸில், தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலையானவர் அமீர் அலி என்றும்,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?