டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வகை கொசுக்களால் பரவும் நோயாகும். இது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த டெங்கு காய்ச்சலுக்கு இயற்கை முறையில் பப்பாளி இலைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். அதன் நன்மைகள் மற்றும் தயாரிப்பு முறைகளை விரிவாகக் காண்போம்.
டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறையும். இதனால் மாதவிடாய் இரத்தப்போக்கு அதிகரித்தல், உடல் சோர்வு, மலம் மற்றும் சிறுநீர் வழியாக இரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும், உடலில் படை திட்டுகள் உண்டாகுதல் மற்றும் காயங்கள் ஏற்பட்டால் நீண்ட நேரம் இரத்தம் நிற்காமல் வழிதல் போன்றவையும் டெங்குவின் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகளுக்கு, எந்தவித பக்க விளைவுகளும் இன்றி இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலை சாறு பெரிதும் உதவுகிறது. இதைத் தயாரிக்க, முதலில் சில பப்பாளி இலைகளில் உள்ள நரம்புகளை அகற்றி, இலைகளை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பின்னர், 200 மில்லி தண்ணீரில் இந்த இலைகளைப் போட்டு, அரை தேக்கரண்டி சீரகம் மற்றும் மிளகு சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த 200 மில்லி தண்ணீர் 100 மில்லியாக வற்றும் வரை கொதிக்க வைத்து, இலைகளை வடிகட்டி, ஆற வைத்து குடிக்க வேண்டும். இந்த கஷாயம் இரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்துவதோடு, ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள், தோலில் ஏற்படும் தடிப்புகள் (rashes), தசை வலி, மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்த உதவும். மேலும், இது கூந்தல் வளர்ச்சிக்கும், தோலின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.