கடந்த கால கசப்புகள் நீங்கி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைக்கு வருகை தரவுள்ளார். வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின்படி, ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அல்லது புதிய அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இதில் அரசின் கொள்கைகள், புதிய திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து ஆளுநர் தனது உரையில் விளக்குவார்.
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் அர்லேக்கரை நேரில் சந்தித்து, சட்டப்பேரவையில் உரையாற்ற அழைப்பு விடுத்தார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக, திமுக ஆட்சியில் கடைசி மூன்று ஆண்டுகளில், ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் போது தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படவில்லை என அப்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார். மேலும், ஆளுநர் தனது உரையில், தமிழக அரசு தெரிவித்த கருத்துக்களுக்கு மாற்றாக தனது உரையை வாசித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அப்போதைய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரை முழுவதும் வாசித்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், வரும் 18ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.