தற்காலப் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இந்தக் கருப்பை கோளாறுகளைத் தடுக்க சில எளிய வழிகளைப் பற்றி இங்கு காண்போம்.
பெரும்பாலான பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் விட்டமின் டி குறைபாடு ஆகும். 65 முதல் 85 சதவீதத்தினருக்கு விட்டமின் டி குறைபாட்டாலேயே இந்தப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, விட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். மேலும், தினமும் காலை வேளையில் சூரிய ஒளி படுமாறு இருப்பது நல்லது. இப்படிச் செய்வதால் கருப்பை கோளாறுகள் மட்டுமின்றி, உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு மாதவிடாய் பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கப்படும்.
மேலும், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து தினமும் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க உதவும். இதனால் கருமுட்டை உற்பத்தி மற்றும் மாதந்தோறும் அது உடைவது சீராக நடைபெறும்.
சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலமும் கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுக்க முடியும். தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இது இன்சுலின் சுரப்பை சீராக வைத்திருக்கவும், உடலில் கெட்டக் கொழுப்பு கலப்பதையும் தடுக்கும்.