MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆன்லைன் மோசடி: வங்கி கணக்கை விற்ற வாலிபர் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆன்லைன் மோசடி: வங்கி கணக்கை விற்ற வாலிபர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆன்லைன் மோசடி: வங்கி கணக்கை விற்ற வாலிபர் கைது!

தமிழ்நாடு

ஆன்லைன் மோசடி: வங்கி கணக்கை விற்ற வாலிபர் கைது!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 8, 2026 4:40 மணி
Fernandez
Share
ஆன்லைன் மோசடி கும்பலுக்கு வங்கி கணக்கை கொடுத்து கமிஷன் பெற்ற வாலிபர் தனசேகரன் கைது
ஆன்லைன் மோசடி கும்பலுக்கு வங்கி கணக்கை கொடுத்து கமிஷன் பெற்ற வாலிபர் தனசேகரன் கைது செய்யப்பட்டார்.
SHARE

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மோசடி கும்பல்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, கமிஷன் அடிப்படையில் வங்கி கணக்குகளை வாங்கி, அதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மோசடி நபர்களுக்கு அனுப்பும் செயலில் சிலர் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கு மூலம் இணைய மோசடியில் பெறப்பட்ட சட்டவிரோதப் பணம் பெறப்பட்டு, அது கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு மோசடி நபர்களுக்கு தொடர்ந்து அனுப்பப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து கேணிக்கரை போலீசார் அந்த வங்கி கணக்கு யாருடையது என விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வங்கி கணக்கு சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் (வயது 25) என்பவருடையது என தெரியவந்தது. மேலும், அவர் தனது வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் மோசடி பணத்தைப் பெற்று, அதை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பி கமிஷன் பெற்று வந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதற்காக பெருந்தொகையை கமிஷனாக பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனசேகரனை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மோசடி நபர்களின் குற்றச் செயல்களுக்கு தனது வங்கி கணக்கை பயன்படுத்திக் கொடுத்து கமிஷன் பெற்றதாகவும், மோசடி பணத்தை குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கணக்கிற்கு கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்புவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தனசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதி அவரை வருகிற 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உதவியதாக வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய யுக்திகளைக் கையாண்டு ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடும் கும்பலைத் தடுக்கவும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்யவும் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்களும் இது போன்ற மோசடிகளில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bank AccountCyber CrimeOnline Fraudஆன்லைன் மோசடிகமிஷன்ராமநாதபுரம்வங்கி கணக்குவாலிபர் கைது
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஜார்க்கண்ட் மாநில மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்
Next Article நடிகர் ஷிவானந்த் நடிக்கும் 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட் குறித்த அறிவிப்பு ‘டாக்ஸிக்’ பட டிரெய்லர் அப்டேட்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாலை விபத்தில் உயிரிழந்த மூதாட்டி

டெல்லியில் சொகுசு கார் மோதி 70 வயது மூதாட்டி பலி: சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி 70 வயது…

ஆகஸ்ட் 8, 2026

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து…

ஆகஸ்ட் 8, 2026

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக…

ஆகஸ்ட் 8, 2026

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், விடுதலைக்காகவும் பாஜக, ஆர்எஸ்எஸ்…

ஆகஸ்ட் 8, 2026

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது…

1 Min Read
கேரளாவில் லிப்ட் விபத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி முதியவர்
தமிழ்நாடு

கேரளாவில் லிப்ட்டில் சிக்கி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு

கேரளாவில், வீட்டில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக லிப்ட்டில் தலை மாட்டிக்கொண்டு 75 வயது மாற்றுத்திறனாளி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு: கொந்தளித்த எதிர்க்கட்சிகள்

அமைச்சர் நிர்மல் குமார் பேசியது சட்டப்பேரவையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட என்ன பயம்?…

2 Min Read
தமிழ்நாடு

விஜய் நாளை பதவியேற்பு.. தமிழகம் முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. அப்போது திமுக கூட்டணியில் 5 இடம் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது. மேலும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?