MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!

தமிழ்நாடு

புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!

Admin
Last updated: மே 18, 2026 3:30 மணி
Admin
Share
SHARE

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில், இன்று (18.05.2026) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்பது பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த பாடநூல்கள், மாணவர்கள் எளிதாகப் புரிந்து கற்கவும், அவர்களின் தனித்திறன்களை வளர்க்கவும், எதிர்பார்க்கப்படும் கற்றல் விளைவுகளை அடையவும் வகை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குழந்தை மையக் கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், பாடநூல்கள் மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் கதைகள், பாடல்கள் மற்றும் கற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. இவை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு, அவர்களின் உடல் இயக்கத் திறன்கள், சமூக மனவெழுச்சித் திறன்கள், விழுமியங்கள் மற்றும் வாழ்க்கை திறன்களையும் வளர்க்கும் வகையில் வண்ணமயமான வடிவமைப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2026-27ஆம் கல்வி ஆண்டு முதல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 1, 2026 அன்று திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். பள்ளி திறக்கும் நாளன்றே, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதையொட்டி, 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் குறித்த பயிற்சி ஜூன் 1 முதல் ஜூன் 3, 2026 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் அமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். விலையில்லா நலத்திட்டங்கள் (பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை, புத்தக பைகள்) மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளன்றே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பள்ளி வளாகம், வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் ஆகியவை தூய்மையாகவும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்ற வகையிலும் பராமரிக்கப்பட வேண்டும். EMIS வழியாக மாற்றுச் சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் பள்ளி வளாகத்தில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:New SyllabusSchool ReopeningTamil Nadu educationஅமைச்சர் ராஜ்மோகன்பாடப்புத்தகங்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தோனி 2027ல் ஓய்வு? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!
Next Article அதிமுக பொதுக்குழு: எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் திரட்டல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

அமைச்சர் ஜெகதீஸ்வரி மகளிர் உரிமைத் தொகை குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் விருதுநகரில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

2 Min Read
தமிழ்நாடு

தமிழக வக்பு சொத்துகளுக்கு ஆபத்து: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் உமீத் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்படாத 30,000 வக்பு சொத்துக்களை உடனடியாகப் பதிவு செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ…

1 Min Read
தமிழ்நாடு

சொகுசு பஸ்ஸில் தவெக எம்.எல்.ஏ.க்கள்: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. மாமல்லபுரத்தில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்தில் சட்டசபைக்கு வந்தனர்.…

1 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில், சிறப்பாகப் பணியாற்றிய 62 காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?