MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்: பாமக கண்டனம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்: பாமக கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்: பாமக கண்டனம்!

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்: பாமக கண்டனம்!

Fernandez
Last updated: ஜூலை 21, 2026 11:24 காலை
Fernandez
Share
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறார்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
SHARE

தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாக கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விற்பனை செய்வதில் உழவர்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மறுபுறம், கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர, நிர்ணயிக்கப்பட்ட 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150 மற்றும் நெல்லாக ரூ.175 என மொத்தம் ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தனியார் வணிகர்களை விட அரசு கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைப்பதால் உழவர்கள் இங்கு வருகின்றனர். இருப்பினும், அவர்களை வாரக் கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்துக் கொள்வதும் பெரும் அநீதி என அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இதே நிலை தொடர்ந்தால், உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்கத் தயாராகி விடுவார்கள் என்றும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி கிடைக்காத நிலை உருவாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா?' என்று கேட்டபோது, உழவர் முட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பித்தார். இந்த சம்பவங்கள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க ஆட்சியாளர்கள் விரும்புவதை காட்டுவதாகவும், இது வரவேற்கத்தக்கது என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கொள்முதல் நிலைய ஊழலுக்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்யாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை என்றும், உழவர்களும் பயனடையப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு பெறப்படுவதற்கு, கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்குப் போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. மேலும், தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும், ஆனால் அது முறையாக வழங்கப்படவில்லை. நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல போன்ற காரணங்களையும் பணியாளர்கள் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் சரி செய்தால் மட்டுமே கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும் என பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

நெல் கொள்முதல் நிலைய கையூட்டு கலாசாரம் புதிதாகத் தோன்றியதல்ல; பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல் தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களைத் தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anbumani RamadossCorruptionNel KolmudhalPattali Makkal Katchiஅன்புமணி ராமதாஸ்உழவர்கள்தமிழ்நாடுநெல் கொள்முதல்பாமகலஞ்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article டெல்லியில் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் டெல்லியில் போராட்டம் வன்முறை: 70 பேர் கைது, 118 போலீசார் காயம்
Next Article சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் எத்தனால் குடுவை வீட்டு சமையலுக்கு எல்பிஜிக்கு பதில் எத்தனால் அறிமுகம்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஜெனரல்…

ஜூலை 21, 2026

சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்: டெல்லி ஐகோர்ட் அனுமதி

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதப் போராட்டத்தில்…

ஜூலை 21, 2026

பிரதமர் இல்லம் முன் போராட்டம்: ராகுல் காந்தி கைது

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே…

ஜூலை 21, 2026

டெல்லி செல்ல அனுமதி மறுப்பு: ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டம்

டெல்லி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பஞ்சாப் விவசாயிகள்…

ஜூலை 21, 2026

டெல்லியில் காங்கிரஸ் திடீர் போராட்டம்: ராகுல் காந்தியுடன் போலீசார் பேச்சுவார்த்தை

டெல்லியில் பிரதமர் மோடி வீடு அருகே காங்கிரஸ்…

ஜூலை 21, 2026

You Might Also Like

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுகதான் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது – செங்கோட்டையன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது திமுகதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி…

1 Min Read
தமிழ்நாடு

புனே சிறுமி கொலை: 55 நாட்களில் தூக்கு தண்டனை – விரைந்த நீதி!

புனேவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் நடந்து 55 நாட்களுக்குள் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

1 Min Read
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக கூட்டத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

விஜய் அரசியலை விட்டு ஓடும் காலம் வரும்: செல்லூர் ராஜு

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நடிகர் விஜய் அரசியலை விட்டே ஓடும் காலம் வரும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: நாளை மின்வாரிய பராமரிப்பு பணி – மின்தடை அறிவிப்பு

திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் உள்ள தாழையூத்து துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?