தமிழகத்தில் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது திமுகதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குதிரை பேரத்தை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கியது திமுகதான். அதற்கு உதாரணம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன். குதிரை பேரத்திற்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்று பாடத்திட்டத்தில் வேறு விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை உருவாக்கிய திமுகவே அது குறித்து பேசலாமா? எங்களுக்கு அந்த அரசியல் இல்லை. வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் தவறு. எங்கள் ஆட்சி வலிமையானது என்பதால் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை. மைனாரிட்டி அரசை நடத்தியது திமுகதான், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக அமையும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். தமிழ்நாட்டில் மாற்றங்கள் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
You Might Also Like
தமிழகத்தில் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம் தேவையில்லை – அரசு விளக்கம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார். வீரியம் குறைந்த ஆர்.எப்.5 வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால்,…
2 Min Read
தமிழ்நாடு தனித்துவத்தை உயர்த்திப் பிடிப்போம் – கனிமொழி
பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டிய நாளில், மாநில உரிமைகளைக் காக்க உறுதியேற்போம் என கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார். நமது தனித்துவத்தை உயர்த்திப் பிடிப்போம்.
1 Min Read
மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அம்பேத்கரின் மார்பளவு சிலை நேற்று முன்தினம் இரவு பெயர்ந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சாலை மறியல் போராட்டத்தில்…
0 Min Read
5 ஆண்டுகள் நீடிக்கும் த.வெ.க. அரசு: வன்னிஅரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பேச்சு
தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு தனது 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்றக்குழு தலைவர் வன்னிஅரசு நம்பிக்கை…
1 Min Read
