தமிழகத்தில் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது திமுகதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குதிரை பேரத்தை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கியது திமுகதான். அதற்கு உதாரணம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன். குதிரை பேரத்திற்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்று பாடத்திட்டத்தில் வேறு விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை உருவாக்கிய திமுகவே அது குறித்து பேசலாமா? எங்களுக்கு அந்த அரசியல் இல்லை. வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் தவறு. எங்கள் ஆட்சி வலிமையானது என்பதால் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை. மைனாரிட்டி அரசை நடத்தியது திமுகதான், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக அமையும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். தமிழ்நாட்டில் மாற்றங்கள் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
You Might Also Like
புனே சிறுமி கொலை: 55 நாட்களில் தூக்கு தண்டனை – விரைந்த நீதி!
புனேவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் நடந்து 55 நாட்களுக்குள் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
1 Min Read
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு இன்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள்…
1 Min Read
இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து முதல் முறை சாதனை!
இந்தியாவை முதல் முறையாக டி20 போட்டியில் வீழ்த்தி அயர்லாந்து அணி சாதனை படைத்துள்ளது. 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
1 Min Read
ஈழத்தமிழர் குரல்: விஜய்க்கு இலங்கை எம்.பி கோரிக்கை!
ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நடிகர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் என இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்.
1 Min Read