தமிழகத்தில் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது திமுகதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குதிரை பேரத்தை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கியது திமுகதான். அதற்கு உதாரணம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன். குதிரை பேரத்திற்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்று பாடத்திட்டத்தில் வேறு விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை உருவாக்கிய திமுகவே அது குறித்து பேசலாமா? எங்களுக்கு அந்த அரசியல் இல்லை. வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் தவறு. எங்கள் ஆட்சி வலிமையானது என்பதால் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை. மைனாரிட்டி அரசை நடத்தியது திமுகதான், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக அமையும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். தமிழ்நாட்டில் மாற்றங்கள் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
You Might Also Like
திமுகவில் இணைகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? அரசியல் களத்தில் பரபரப்பு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Min Read
நீலகிரி: 27 டாஸ்மாக் கடைகள் மூடல் – அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில்…
1 Min Read
29-06-2026 இன்றைய ராசி பலன்: நன்மைகள் உண்டு, கவனம் தேவை!
29 ஜூன் 2026 இன்றைய ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் விரிவான கணிப்புகள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், ஆனால் கவனத்துடன் செயல்பட…
3 Min Read
மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல சதி: பயங்கர சதி அம்பலம்!
மும்பையில் மொஹரம் ஊர்வலத்தின் போது 15,000க்கும் மேற்பட்டோரைக் கொல்ல நடந்த பயங்கர சதி அம்பலமாகியுள்ளது. பயாஸ் பிரேம்ஜி என்ற நபர் விஷ மாத்திரைகளைத் தயாரித்து விநியோகித்ததாகக் கைது…
1 Min Read

