தமிழகத்தில் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது திமுகதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குதிரை பேரத்தை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கியது திமுகதான். அதற்கு உதாரணம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன். குதிரை பேரத்திற்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்று பாடத்திட்டத்தில் வேறு விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை உருவாக்கிய திமுகவே அது குறித்து பேசலாமா? எங்களுக்கு அந்த அரசியல் இல்லை. வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் தவறு. எங்கள் ஆட்சி வலிமையானது என்பதால் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை. மைனாரிட்டி அரசை நடத்தியது திமுகதான், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக அமையும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். தமிழ்நாட்டில் மாற்றங்கள் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
You Might Also Like
தேர்தல் முடிவுகள்: ஸ்டாலின் கண்ட ‘மாயாஜால சுனாமி’ – திமுகவுக்கு எச்சரிக்கை!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவுகளை 'கவர்ச்சி மாயாஜால சுனாமி' என வர்ணித்து, கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
1 Min Read
திருச்செந்தூர் கோவில் அன்னதானத்தில் புழு: நயினார் நாகேந்திரன் கண்டனம்
திருச்செந்தூர் கோவில் அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளியான காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் திரு. விஜய்க்கு…
1 Min Read
வீடுகளுக்கு மதுபானம் டெலிவரி இல்லை: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே டாஸ்மாக் மதுபானங்கள் விநியோகம் செய்யப்படாது என்று அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். இது தவறான தகவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 Min Read
74 ஆண்டுகால மர்மம் முடிந்தது: ‘பான் அம்’ விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு!
74 ஆண்டுகளுக்குப் பிறகு, 1952ல் கடலில் மூழ்கி 52 உயிர்களைப் பலி கொண்ட 'பான் அம்' விமானத்தின் இடிபாடுகள் 2000 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது விமானப்…
2 Min Read

