தமிழகத்தில் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது திமுகதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குதிரை பேரத்தை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கியது திமுகதான். அதற்கு உதாரணம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன். குதிரை பேரத்திற்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்று பாடத்திட்டத்தில் வேறு விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை உருவாக்கிய திமுகவே அது குறித்து பேசலாமா? எங்களுக்கு அந்த அரசியல் இல்லை. வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் தவறு. எங்கள் ஆட்சி வலிமையானது என்பதால் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை. மைனாரிட்டி அரசை நடத்தியது திமுகதான், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக அமையும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். தமிழ்நாட்டில் மாற்றங்கள் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
You Might Also Like
கெலவரப்பள்ளி அணை: நாளை முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சூளகிரி வட்டாரங்களில் உள்ள 8000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில், கெலவரப்பள்ளி அணையில் இருந்து நாளை முதல்…
2 Min Read
முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்: விரைவில் வெளியீடு?
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு 'ஏ' (Adults Only) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோருடன் வந்தாலும் 18 வயதுக்குட்பட்டோர்…
1 Min Read
சென்னையில் ஏ.டி.எம். பணம் நிரப்பும் வாகனத்தில் ரூ.24 லட்சம் மாயம்: போலீஸ் விசாரணை
சென்னையில் ஏ.டி.எம். பணப் பரிமாற்ற வாகனத்தில் இருந்து ரூ.24 லட்சம் காணாமல் போன சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பணப்பெட்டிகள் மாயமான மர்மம்…
2 Min Read
சென்னை – சந்திரகாச்சி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி சிறப்பு ரயில் சேவை பயணிகளின் வசதிக்காக மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1 Min Read
