தமிழகத்தில் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது திமுகதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குதிரை பேரத்தை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கியது திமுகதான். அதற்கு உதாரணம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன். குதிரை பேரத்திற்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்று பாடத்திட்டத்தில் வேறு விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை உருவாக்கிய திமுகவே அது குறித்து பேசலாமா? எங்களுக்கு அந்த அரசியல் இல்லை. வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் தவறு. எங்கள் ஆட்சி வலிமையானது என்பதால் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை. மைனாரிட்டி அரசை நடத்தியது திமுகதான், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக அமையும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். தமிழ்நாட்டில் மாற்றங்கள் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
You Might Also Like
கே.ராஜன் மறைவு: முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்
முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழ்த் திரையுலகின் மூத்த கலைஞர் கே.ராஜன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.
1 Min Read
பள்ளிகள் தயார் நிலை: கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
2026-27 கல்வியாண்டிற்கான பள்ளிகளின் முன்னேற்பாடுகள் குறித்து கல்வித்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தூய்மை, உபகரணங்கள், நலத்திட்டங்கள் குறித்த விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
1 Min Read
செயல்பாடு முக்கியம்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், "பேசுவதை விட செயல்படுவதே முக்கியம்" என்று தனது மகன் குறித்து அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
1 Min Read
சட்டமன்றத்தில் கிண்டல்: முதல்வருக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை கிண்டல் செய்ததற்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், 'மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன். மக்கள் தேடும் இடத்தில் நான் முதல் ஆளாக நிற்பேன்' என்று ஆவேசமாக…
2 Min Read
