MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு
இந்தியா

22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

Admin
Last updated: May 13, 2026 6:20 am
Admin
Share
SHARE

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27 கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் 'கெஸ் பேப்பர்' என்ற பெயரில் வினாத்தாள் கசிந்ததும், அதில் இருந்து சுமார் 600 மதிப்பெண்களுக்கு மேல் வினாக்கள் ஒத்துப்போனதும் முக்கியப் பிரச்சனையாக மாறியது.

இதையடுத்து, தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. மத்திய முகமைகளுக்குத் தேவையான ஆவணங்களை வழங்கி, தேசிய தேர்வு முகமை இந்த விசாரணையைத் தீவிரப்படுத்தியது. அது தொடர்பான விளக்கத்தை கடந்த 10-ஆம் தேதியன்று தெரிவித்தது. இந்தச் சூழலில், சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி இருந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று அதிரடியாக அறிவித்தது.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தளப் பதிவில், 'தேசியத் தேர்வுகளை நியாயமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் நடத்துவதில் எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க, நீட் தேர்வு விவகார நடவடிக்கைகளுக்காக மத்திய முகமைகளுக்கு என்.டி.ஏ. பரிந்துரைத்திருந்தது. மத்திய முகமைகளுடன் ஒருங்கிணைந்து என்.டி.ஏ. ஆய்வு செய்த தகவல்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையிலும், இதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், மத்திய அரசின் ஒப்புதலுடன், தேசியத் தேர்வு முகமை ஒரு முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் (யு.ஜி.) தேர்வை ரத்து செய்யவும், தனியாக அறிவிக்கப்படும் தேதிகளில் அத்தேர்வை மீண்டும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.டி.ஏ.வுக்கு கிடைத்த தகவல்களையும், சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளையும் ஒருங்கிணைத்து பார்க்கும் போது, தற்போதைய தேர்வு நடைமுறையை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க இயலாது. தேர்வு மீண்டும் நடத்தப்படும் தேதி மற்றும் அதற்கான புதிய ஹால்டிக்கெட் வெளியீடு குறித்த அட்டவணை வரும் நாட்களில் என்.டி.ஏ. அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்.

இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை சி.பி.ஐ.க்கு பரிந்துரைக்க மத்திய அரசு மேலும் ஒரு முடிவை எடுத்துள்ளது. அத்துறையின் விசாரணைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும், ஆவணங்களையும், உதவிகளையும் வழங்கி என்.டி.ஏ. முழுஒத்துழைப்பை வழங்கும். தேர்வு மீண்டும் நடத்தப்படுவதால், தேர்வர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிரமங்கள் ஏற்படும் என்பதை என்.டி.ஏ. நன்கு உணர்ந்துள்ளது. இத்தகைய பின்விளைவுகளை என்.டி.ஏ. சாதாரணமாக கருதவில்லை. இந்த தேர்வுக்கு பதிவு செய்யப்பட்ட விவரங்கள், தேர்வர்களின் தகுதி நிலை மற்றும் அவர்களால் தேர்வுசெய்யப்பட்ட தேர்வு மையங்கள் ஆகியவை மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்வுக்கும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். இதற்குப் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. மேலும், கூடுதல் தேர்வுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மேலும், மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணங்கள் அவர்களுக்கு திருப்பியளிக்கப்படும்.

மேலும் இதுதொடர்பான விவரங்களை neet-ug@nta.ac.in என்ற இணையதளத்தையோ, 011-40759000, 011-69227700 என்ற எண்களையோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்காக சி.பி.ஐ.யிடம் வழக்கை மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. நேற்று வழக்குப்பதிவு செய்தது.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குனர் அபிஷேக் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 'நீட் தேர்வு ரத்துக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். தேர்வில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. நீட் மறுதேர்வு குறித்து எனது குழுவுடன் அமர்ந்து ஆலோசனை நடத்துவேன். இன்னும் 7 அல்லது 10 நாட்களில், மறுதேர்வுக்கான முழு கால அட்டவணையும் அறிவிக்கப்படும். அப்போதுதான் கல்வியாண்டும், மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும். மறுதேர்வுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். எந்த தவறும் இன்றி மறுதேர்வு நடத்தப்படும்' என்று அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு
Next Article தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசின் திடீர் அறிவிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

இந்தியா

சி.பி.ஐ. | சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு விசாரணை தீவிரம் – சம்பவ இடத்திற்கு விரைந்த சி.பி.ஐ.

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்துள்ளது.

1 Min Read
இந்தியா

இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்

வெளிநாடு இந்தியா இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்... நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்

2 Min Read
இந்தியா

பிரதமர் மோடி அதிரடி: பாதுகாப்பு வாகனங்கள் 50% குறைப்பு, மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை

நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணிகளைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, தனது அதிகாரப்பூர்வ…

1 Min Read
இந்தியா

இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்

உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான். 1957-ல் அது நடந்தது. அதன் பின்னர் இந்தியா…

5 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?