MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

இந்தியா

22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

Admin
Last updated: மே 13, 2026 6:20 காலை
Admin
Share
SHARE

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27 கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் 'கெஸ் பேப்பர்' என்ற பெயரில் வினாத்தாள் கசிந்ததும், அதில் இருந்து சுமார் 600 மதிப்பெண்களுக்கு மேல் வினாக்கள் ஒத்துப்போனதும் முக்கியப் பிரச்சனையாக மாறியது.

இதையடுத்து, தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. மத்திய முகமைகளுக்குத் தேவையான ஆவணங்களை வழங்கி, தேசிய தேர்வு முகமை இந்த விசாரணையைத் தீவிரப்படுத்தியது. அது தொடர்பான விளக்கத்தை கடந்த 10-ஆம் தேதியன்று தெரிவித்தது. இந்தச் சூழலில், சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி இருந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று அதிரடியாக அறிவித்தது.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தளப் பதிவில், 'தேசியத் தேர்வுகளை நியாயமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் நடத்துவதில் எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க, நீட் தேர்வு விவகார நடவடிக்கைகளுக்காக மத்திய முகமைகளுக்கு என்.டி.ஏ. பரிந்துரைத்திருந்தது. மத்திய முகமைகளுடன் ஒருங்கிணைந்து என்.டி.ஏ. ஆய்வு செய்த தகவல்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையிலும், இதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், மத்திய அரசின் ஒப்புதலுடன், தேசியத் தேர்வு முகமை ஒரு முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் (யு.ஜி.) தேர்வை ரத்து செய்யவும், தனியாக அறிவிக்கப்படும் தேதிகளில் அத்தேர்வை மீண்டும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.டி.ஏ.வுக்கு கிடைத்த தகவல்களையும், சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளையும் ஒருங்கிணைத்து பார்க்கும் போது, தற்போதைய தேர்வு நடைமுறையை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க இயலாது. தேர்வு மீண்டும் நடத்தப்படும் தேதி மற்றும் அதற்கான புதிய ஹால்டிக்கெட் வெளியீடு குறித்த அட்டவணை வரும் நாட்களில் என்.டி.ஏ. அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்.

இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை சி.பி.ஐ.க்கு பரிந்துரைக்க மத்திய அரசு மேலும் ஒரு முடிவை எடுத்துள்ளது. அத்துறையின் விசாரணைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும், ஆவணங்களையும், உதவிகளையும் வழங்கி என்.டி.ஏ. முழுஒத்துழைப்பை வழங்கும். தேர்வு மீண்டும் நடத்தப்படுவதால், தேர்வர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிரமங்கள் ஏற்படும் என்பதை என்.டி.ஏ. நன்கு உணர்ந்துள்ளது. இத்தகைய பின்விளைவுகளை என்.டி.ஏ. சாதாரணமாக கருதவில்லை. இந்த தேர்வுக்கு பதிவு செய்யப்பட்ட விவரங்கள், தேர்வர்களின் தகுதி நிலை மற்றும் அவர்களால் தேர்வுசெய்யப்பட்ட தேர்வு மையங்கள் ஆகியவை மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்வுக்கும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். இதற்குப் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. மேலும், கூடுதல் தேர்வுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மேலும், மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணங்கள் அவர்களுக்கு திருப்பியளிக்கப்படும்.

மேலும் இதுதொடர்பான விவரங்களை neet-ug@nta.ac.in என்ற இணையதளத்தையோ, 011-40759000, 011-69227700 என்ற எண்களையோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்காக சி.பி.ஐ.யிடம் வழக்கை மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. நேற்று வழக்குப்பதிவு செய்தது.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குனர் அபிஷேக் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 'நீட் தேர்வு ரத்துக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். தேர்வில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. நீட் மறுதேர்வு குறித்து எனது குழுவுடன் அமர்ந்து ஆலோசனை நடத்துவேன். இன்னும் 7 அல்லது 10 நாட்களில், மறுதேர்வுக்கான முழு கால அட்டவணையும் அறிவிக்கப்படும். அப்போதுதான் கல்வியாண்டும், மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும். மறுதேர்வுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். எந்த தவறும் இன்றி மறுதேர்வு நடத்தப்படும்' என்று அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு
Next Article தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசின் திடீர் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பாக்கெட் உணவு எச்சரிக்கை லேபிள் வழக்கு

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை: 2 வார கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்புறத்தில் எச்சரிக்கை லேபிள்:…

ஆகஸ்ட் 14, 2026

ஹரித்வார் புனித பூமி குப்பை மேடானது: பக்தர்கள் வருகையால் அவதி

உத்தராகண்ட் மாநிலத்தின் புனித நகரமான ஹரித்வார், 5…

ஆகஸ்ட் 14, 2026

திருப்பதியில் ஒரே நாளில் 82,800 பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில்…

ஆகஸ்ட் 14, 2026

ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு: 600 பேர் மீது வழக்கு

ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகக்…

ஆகஸ்ட் 14, 2026

கொல்கத்தா மருத்துவமனையில் செவிலியர் மர்ம மரணம்: உடல் கழிவறையில் மீட்பு

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண்…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

இந்தியா

கேரளாவில் ரூ.25 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: இளைஞர் கைது

கேரள மாநிலம் மலப்புரம் கொண்டோடியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 780 கிராம் உயர்தர போதைப்பொருளுடன் இளைஞர் ரதேஷ் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி…

1 Min Read
இந்தியா

கர்நாடகா: கார்-லாரி மோதலில் 4 பேர் பலி

கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் இருந்து மாண்டியா மாவட்டம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோத்தகிரி பகுதியில் ஜிகானி பாலியா என்ற இடத்தில் சென்றபோது, துமகூரு நோக்கி…

1 Min Read
இந்தியா

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பிக்கப் மோதி தம்பதி பலி, மகன் காயம்

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் அருகே பிக்கப் வாகனம் மோதி தம்பதியினர் உயிரிழந்தனர். அவர்களின் 10 வயது மகன் காயமடைந்துள்ளார். தப்பியோடிய ஓட்டுநரை காவல்துறை தேடி வருகிறது.

1 Min Read
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
இந்தியா

சோனம் வாங்சுக் உடல்நிலை: கண்காணிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காலவரையின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினசரி கண்காணிக்கவும், தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?