MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு

தமிழ்நாடு

அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு

Admin
Last updated: மே 13, 2026 6:20 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை வென்றது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. அ.தி.மு.க. மட்டும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் ஆட்சியை இழந்த அ.தி.மு.க., இந்த முறையும் தோல்வியை சந்தித்ததால், கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையில் தனியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என்றும், கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தனர். மேலும் சட்டசபை அ.தி.மு.க. குழு தலைவராக வேலுமணியையும் தேர்வு செய்தனர்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்த அவரது தரப்பினர், தற்காலிக சபாநாயகராக இருந்த கருப்பையாவிடம் அதற்கான கடிதத்தை நேற்று முன்தினம் கொடுத்தனர். இதேபோல் எஸ்.பி.வேலுமணியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை சி.வி.சண்முகம் தரப்பினரும் கொடுத்தனர். இதனால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததாக கருதப்பட்டது.

அ.தி.மு.க.வில் கோஷ்டி மோதல் வலுத்துள்ள நிலையில், சி.வி.சண்முகம் குழுவை முதல்-அமைச்சர் விஜய் நேற்று மாலை சந்தித்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை நேற்று விஜய் சந்தித்தார். அதன்படி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு விஜய் நேற்று மாலை சென்றார்.

அங்கு சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் விஜய்யை வரவேற்றனர். அப்போது விஜய்யிடம் தங்களது தரப்புக்கு 28 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை இன்று நடத்துகிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) சட்ட சபையில் அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் ஒருவர் முன்மொழிவார். அதில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றுவார். எதிர்க்கட்சியினரும் இதில் உரையாற்றுவார்கள்.

அதன் பிறகு அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும். தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்ப்போரின் எண்ணிக்கையையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார். சட்டசபையில் வீற்றிருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 என்ற எண்ணிக்கையை தீர்மானம் பெற வேண்டும்.

அதன்படி வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார். வெற்றி பெற்று விட்டால் அரசு தனது பணியை தொடர்ந்து நடத்தும். ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால், அது கவர்னருக்கு தெரிவிக்கப்படும். பெரும்பான்மையை அரசு நிரூபிக்கத் தவறிவிட்டதால் அரசு கலைக்கப்படுவதாக கவர்னர் உத்தரவிடுவார். ஆனால், த.வெ.க. அரசு இந்த தீர்மானத்தில் தோற்க வாய்ப்பு மிகமிக குறைவாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன் தங்களுக்கு 26 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்திருந்தார். சி.வி.சண்முகம் தரப்பு தங்களுக்கு 28 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறினார். இரு தரப்புக்கும் எத்தனை பேர் ஆதரவு என்பது இன்று சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் தெரியவரும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: தமிழக வீரர் சாய் சுதர்சன் புதிய சாதனை.. கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக அசத்தல்
Next Article 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சட்டப்பேரவையில் சிரிப்பலை: முதல்வர் விஜயை கலாய்த்த எம்எல்ஏ காமராஜ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்எல்ஏ காமராஜின் நகைச்சுவை பேச்சு, முதல்வர் விஜயை சிரிக்க வைத்தது. 8வது முயற்சியில் அவர் வாழ்த்த முயன்றபோது சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

1 Min Read
டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு ஏலத்தில் விற்பனை
தமிழ்நாடு

482 கோடிக்கு ஏலம் போன டி-ரெக்ஸ் எலும்புக்கூடு: உலக சாதனை!

நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 'டி-ரெக்ஸ்' டைனோசர் எலும்புக்கூடு 'கஸ்' சுமார் 482 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது. இது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

1 Min Read
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆக உயர்கிறதா? புதிய விண்ணப்பங்கள் பெற திட்டம்!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டு, புதிய விண்ணப்பங்கள் பெற இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்படும் என தகவல் வெளியாகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில்…

2 Min Read
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மேடையில் பேசுகிறார்
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்

மதுரையில் நடந்த கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் முதலமைச்சர் பதவி குறித்து கடுமையான…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?