நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் – ராகுல் காந்தி

நாடு முழுவதும் கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐதராபாத்தில் நடந்த போராட்டத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்ட வீடியோவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், 'லட்சக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கியிருக்கும்போதும், 22 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும்போதும் பிரதமர் மவுனம் காக்கிறார். அரசு பதிலளிப்பதில் கவனம் செலுத்தாமல், தப்பிப்பதில் மும்முரமாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.

மேலும் அவர், 'கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க ஒரு குறைபாடற்ற அமைப்பு நிறுவப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்' என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version